நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பாவேந்தர் பாரதிதாசன் குறித்த அரிய செய்திகள்


திரையுலகில் பாவேந்தர்
திரைப்படத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய திரைப்படங்களின் விவரம்.

(திரைக்கதை - வசனம் - பாடல்கள்)
.எண்.            திரைப்படத்தின் பெயர்     கதாநாயகன்               ஆண்டு
1.            பாலாமணி () பக்காத்திருடன் , டி.கே.சண்முகம்   1937
2.            இராமானுஜர்             சங்கு சுப்ரமணியம்              1938
3.            கவிகாளமேகம்       டி.என்.ராஜரத்தினம்            1940
4.            சுலோசனா   டி.ஆர்.சுந்தரம்           1944
5.           ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி,       பி.எஸ்.கோவிந்தன்  1947
6.            பொன்முடி   பி.வி.நரசிம்மபாரதி             1949
7.            வளையாபதி              ஜி.முத்துக்கிருடடிணன்  1952
8.            பாண்டியன் பரிசு     சிவாஜி கணேசன்  (வெளிவரவில்லை)
9.            மகாகவி பாரதியார்                              (வெளிவரவில்லை)

திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாவேந்தரின் பாடல்கள்

.எண்.            பாடல்கள்      பாடல் இடம் பெற்றுள்ள ஆண்டு
                                        திரைப்படம்
1.        அனைத்துப் பாடல்களும்       பாலாமணி () பக்காத்திருடன்               1937
2.            அனைத்துப் பாடல்களும்                               ஸ்ரீ ராமானுஜர்           1938
3.            அனைத்துப் பாடல்களும்                               கவிகாள மேகம்      1940
4.            வெண்ணிலாவும் வானும் போல...       பொன்முடி   1950
5.            துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... ஓர் இரவு        1951
6.            அதோ பாரடி அவரே என் கணவர்...        கல்யாணி     1952
7.            வாழ்க வாழ்க வாழ்கவே...                            பராசக்தி         1952
8.            பசியயன்று வந்தால் ஒரு பிடி சோறு...              பணம்                1952
9.            அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?...               அந்தமான் கைதி   1952
10.          குளிர்த்தாமரை மலர்ப் பொய்கை...      வளையாபதி              1952
11.          குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி...      வளையாபதி              1952
12.          தாயகமே வாழ்க தாயகமே வாழ்க...    பூங்கோதை 1953
13.          பாண்டியன் என் சொல்லை.....                   திரும்பிப்பார்              1953
14.          ஆலையின் சங்கே நீ ஊதாயோ...            ரத்தக் கண்ணீர்         1954
15.          எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்        என் மகள்       1954
16.         நீலவான் ஆடைக்குள் உடல் ...கோமதியின்காதலன்               1955
17           ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள்...          நானே ராஜா                1955
18           தலைவாரி பூச்சூடி உன்னை-பாட...       ரங்கோன் ராதா        1956
19.          கோரிக்கை யற்றுக் கிடக்கு தண்ணே...             குலதெய்வம்             1956
20.          ஒரே ஒரு பைசா தருவது பெரிசா...        பெற்ற மனம்              1960
21.          பாடிப் பாடிப் பாடி வாடி...  பெற்ற மனம்              1960
22.          மனதிற்குகந்த மயிலே வான்விட்டு...               பெற்ற மனம்              1960
23.          தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த...                பஞ்சவர்ணக்கிளி  1965
24.          எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்...    கலங்கரை விளக்கம்          1965
25.          வலியோர் சிலர் எளியோர் தமை...       மணிமகுடம்              1966
26.          புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட            சந்திரோதயம்           1966
27.          எங்கெங்குக் காணிணும் சக்தியடா !...          நம்ம வீட்டுத் தெய்வம்    1970
28.          சித்திரச் சோலைகளே-உமை நன்கு....       நான் ஏன் பிறந்தேன்            1972
29.          புதியதோர் உலகம் செய்வோம் -             பல்லாண்டு வாழ்க               1975
30.          காலையிளம் பரிதியிலே ...         கண்ணன் ஒரு கைக் குழந்தை  1978
31.          அம்மா உன்றன் கைவளையாய் ...        நிஜங்கள்        1984
32.          கொலை வாளினை எடடா... சிவப்பதிகாரம்
32.          பெண்சிங்கம்
33.      உடும்பன்

பாவேந்தர் பாரதிதாசன் உரிமையாளராகவும் ஆசிரியராகவும்
பொறுப்பேற்று நடத்திய இதழ்களின் பெயர்ப் பட்டியல்

1.            புதுவை முரசு (வார இதழ்)             10-11-1930  -  9-11-1931
                பாண்டிச்சேரி, பிரஞ்சிந்தியா.

2.           ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்            1935 ( பவ வருடம் பங்குனி
                (மாதாந்தக் கவிதைப் பத்திரிக்கை)       முதல் யுவவருடம்
                புதுச்சேரி.      புரட்டாசி வரை )

3.            குயில் (புத்தகம்) குயில் நிலையம்,      சனவரி 1946
                திருவல்லிக்கேணி, சென்னை.

4.            குயில் ( ஒரு பெயர்ப்பன்னூல் )                ஜூன் 1947
                பாரதிதாசன் பதிப்பகம்,
                95, பெருமாள் கோயில் தெரு.
                புதுச்சேரி, பிரஞ்சிந்தியா.

5.            குயில் (திங்கள் இதழ்)       1-9-1947   -  1-10-1948
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி.

6.            குயில் (தினசரி)       13-9-1947 - 26-10-1948
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி.

7.            குயில் (கிழமை இதழ்)      1-6-1958    -   7-2-1961
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி

8.            குயில் (திங்களிருமுறை)             15-4-1962   -  1-8-1962
                10, இராமன் தெரு, தி.நகர், சென்னை‡17.

 வள்ளுவர் உள்ளம் எனும் தலைப்பில் குயில் கிழமை இதழில்
பாரதிதாசன் எழுதிய திருக்குறள் உரைகள் பற்றிய விவரம்

( 1-12-1959 முதல் 22-07-1960 வரை )
அறத்துப்பால் / அதிகாரம்
                               
                               
1.            உலகின் தோற்றம்  (கடவுள் வாழ்த்து)              10
2.            வான் சிறப்பு                10
3.            நீத்தார் பெருமை    10
4.            அறன் வலியுறுத்தல்         10
5.            இல்வாழ்க்கைத் துணை நலம்  10
6.            வாழ்க்கைத் துணை நலம்             10
7.            மக்கட்பேறு 10
8.            அன்புடைமை           10
9.            விருந்தோம்பல்      3

பொருட்பால் / அதிகாரம்
10           கொடுங்கோன்மை              2
                உரை எழுதப்பட்ட திருக்குறளின் எண்ணிக்கை       85

பாரதிதாசன் ஆசிரியராகப் பணியாற்றிய இடங்கள்
.எண்ஊர்ப்பெயர்கள்    பகுதிகள்        ஆண்டு
1.            நிரவி,                காரைக்கால்               16-7-1907
2.            முத்திரைப்பாளையம்,     புதுச்சேரி       12-1-1912
3.            கூனிச்சம்பட்டு,       புதுச்சேரி       29-6-1914
4.            வில்லியனூர்,          புதுச்சேரி       29-3-1916
5.            ஆலங்குப்பம்,           புதுச்சேரி       7-7-1916
6.            திருநள்ளாறு,            காரைக்கால்               11-4-1917
7.            திருபுவனை                , புதுச்சேரி     27-9-1918
8.            திருமலைராயன்பட்டினம்,          காரைக்கால்               11-11-1921
9.            முத்தியால்பேட்டை,         புதுச்சேரி       13-5-1924
10.          புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி,       புதுச்சேரி       17-8-1926
11.          புதுவை சுய்ர்கூப் வீதி பள்ளி,      புதுச்சேரி       26-11-1931
12.          கூனிச்சம்பட்டு,       புதுச்சேரி       10-8-1934
13.          நெட்டப்பாக்கம்,      புதுச்சேரி       19-9-1935
14.          புதுவை சுய்ர்கூப் வீதி பள்ளி,      புதுச்சேரி       5-1-1939
15.          நிரவி காரைக்கால்,              20-7-1944
16.          புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி,       புதுச்சேரி       26-7-1944

நன்றி: புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறையின் வெளியீடான விளக்கக் கையேடு



1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பாவேந்தர் பற்றிய அரிய செய்திகள் அருமை ஐயா