நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 ஜூலை, 2026

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் விருதுநகர் குறள்நெறிக் கழகம் நடத்தும் திருக்குறள் மறுமலர்ச்சி மாநாடு


நாள்: 02. 08. 2026, ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை 9 மணி முதல் (முழுநாள் நிகழ்வு) 

இடம்: வி.வி. சண்முகம்வள்ளியம்மை நினைவுத் திருமண மண்டபம், அருப்புக்கோட்டைச் சாலை, அல்லம்பட்டி, விருதுநகர் 

 மாநாட்டு நிகழ்வுகள்: பேரணி, கொடியேற்றம், திருவள்ளுவர் படத்திறப்பு, திருக்குறள் இசை நிகழ்ச்சிகள், தொடக்க விழா, நூல்கள் வெளியீடு, வாழ்த்துரை, விருதுநகர் மாவட்டத்தில் மறைந்த குறள்நெறிச் சான்றோர்களின் படத்திறப்பு, பாட்டரங்கம், வழக்காடு மன்றம், உரையரங்கம், கருத்தரங்கம், நிறைவு விழா பரிசளிப்பு என்னும் அமைப்பில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருக்குறள் அறிஞர்கள் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். 

ஒருங்கிணைப்பாளர்: புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன் 

தொடர்பாளர்கள்:

பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் - 8056035782

பேராசிரியர் கா. சிறீதர் - 9486592380

தலைமையாசிரியர் கா. நல்லதம்பி - 9443631639







வியாழன், 30 ஜூலை, 2026

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் சிறப்பு நேர்காணல்

 


 தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இலக்கியத்துறையின் முன்னைத் தலைவரும் மூத்த தமிழறிஞருமான கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, படைப்பு நூல்கள் என்று பன்முக ஆற்றலால் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பெருந்தகையாளர் ஆவார். இவர்தம் கடந்தகால வாழ்வியலை அறிந்துகொள்ள, 25.07.2026 அன்று தஞ்சையில் பேராசிரியரின் “வள்ளுவம்”  இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். தமிழகத்துக்குத் தேவையான தமிழ்க் கல்வி சார்ந்தும், தமிழிலக்கியப் போக்குகள் குறித்தும், தம் கடந்தகால தமிழ் வாழ்வு குறித்தும், தம் ஆசிரியப் பெருமக்கள் குறித்தும் பெருமையோடு உரையாடிய செய்திகளை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றோம். 

 கடல்கடந்த நாடுகளிலும் தமக்கான மாணவச் செல்வங்களைப் பெற்றுத் திகழும் கு.வெ.பா. ஐயாவை நிகர்த்த நற்றமிழ்ச் சான்றோர்களை இற்றைத் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அறிஞர் பெருமகனாரின் அரிய செவ்வியைக் கேட்டுச் சுவைக்குமாறு உரிமையோடு தங்களை வேண்டுகின்றேன்.

காணொலி இணைப்பு