முனைவர் வெ. முருகன்
[முனைவர் வெ. முருகன் தருமபுரி மாவட்டம் கூச்சனூர் ஊரினர்; ஆங்கிலப் பேராசிரியர்; தொல்காப்பியம், கலித்தொகை முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழக நிறுவனத்திற்காக ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதியினைத் தொகுத்தவர். பேராசிரியர் வை. சச்சிதானந்தம் அவர்களின் வழியாக ஒப்பிலக்கிய ஆய்வுகள், அகராதிப் பணிகள், மொழிபெயர்ப்புத் துறைகளின் திசைகளை அறிந்தவர். செம்மொழி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழக அகராதிப் பணிகளில் பணியாற்றியவர்]
சில திங்களுக்கு முன்னர்(25.03.2025) அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற அகராதி நாள் விழாவில் கலந்துகொண்டு அறிஞர்களின் உரைகளைச் செவிமடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. பேராசிரியர் ப. அருளி ஐயாவின் உரையும் அறிஞர் வெ. முருகன் அவர்களின் உரையும் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தது. முன்னவர் உரை தனித்தமிழின் சிறப்புரைக்கும் வகையில் செழித்திருந்தது. அடுத்து அமைந்த அறிஞர் வெ.முருகன் அவர்களின் உரை தமிழ் அகராதிகளின் நிலைகளை எடுத்துரைப்பனவாகவும், ஆக்சுபோர்டு நிறுவனத்திற்காகத் தாம் உருவாக்கிய அகராதிகளின் சிறப்புகளை எடுத்துரைப்பனவாகவும் இருந்தன.
அறிஞர் வெ. முருகன் அவர்களை இலண்டன், இலிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரை நிகழ்த்தியபொழுதே நேரில்கேட்டுச் சுவைத்தவன். அவர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள பெரும்பணியை முன்னரே அறிந்து, அந்த மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழ் தெரியாத என் பிறமொழி நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
இலங்கையில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் தொல்காப்பியத்தைப் பலவகை ஆராய்ச்சி நுட்பங்களுடன் பதிப்பித்தும், படிப்பித்தும் உயர்பணிகளைச் செய்திருந்தாலும் அவர்கள் தம்முடன் வாழும் சிங்களமொழி அறிஞர்களுக்குத் தொல்காப்பியத்தைச் சிங்களத்தில் பெயர்த்து அறிமுகம் செய்திருக்கலாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. யான் அறிந்தவகையில் தொல்காப்பியம் சிங்களமொழிக்கு அறிமுகம் ஆகவில்லை என்று உணர்ந்தேன்(அறிந்தோர் அறிவிப்பின் ஏற்பேன்). அதனால் என் நண்பர் தம்மிக விக்கிரமசிங்கே அவர்களுக்கு முனைவர் வெ.முருகனின் மொழிபெயர்ப்பில் அமைந்த தொல்காப்பியம் நூலொன்றை (ஆசியவியல் நிறுவனம் வெளியீடு) வாங்கிச் சென்று கொடுத்து, எம் மொழியின் இலக்கண அமைப்பைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்து மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் என்று பலவாண்டுகளுக்கு முன்னர் கொடுத்துவந்தேன். அந்த வகையில் தொல்காப்பியத்துக்கு மொழிபெயர்ப்புப் பெரும்பணி செய்த பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் மீது தனிப்பட்ட அன்பும் மதிப்பும் எனக்கு உண்டு.
பேராசிரியர் வி. முருகன் அவர்கள் ஆங்கில இலக்கியம் பயின்ற அறிஞர் ஆவார். தமிழ் அறிஞர்களுடன் தொடக்கம் முதல் நல்ல தொடர்பில் இருப்பவர். தம் ஆங்கில அறிவின் துணையைக்கொண்டு, தமிழுக்கு உயர்ந்த தொண்டாற்ற வேண்டும் என்று தம்மை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டு உழைப்பவர். தமிழின் சிறப்பும், தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட செவ்வியல் நூல்களின் சிறப்பும் இன்னும் உலகத்தார் ஏற்கும் வகையில் கொண்டுசேர்க்கப்படவில்லை என்பது அறிஞர் வெ. முருகனின் எண்ணமாக உள்ளது. அதற்குத் தகுந்த பணிகளைச் செய்துவரும் வெ. முருகன் அவர்களின் பணிகளுள் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, கலித்தொகையை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, தமிழுக்கு ஆக்சுபோர்டு நிறுவனம் வழியாக அகராதியை வெளியிட்டமை இவரின் வாழ்நாள் சாதனைப் பணிகளாகும்.
கொள்கைத் தெளிவும் குறிக்கோள் நோக்கும் கொண்டு தமிழுக்கு ஆக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் வெ. முருகன் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் வாழ்வியலையும் சுருக்கமாக எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன். இவர் போலும் தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைக்கும் அறிஞர் பெருமக்களை உலகத் தமிழர்கள் உச்சிமேல்வைத்துப் போற்றுவது முதன்மைக் கடமையாகும்.
வெ. முருகனின் தமிழ் வாழ்க்கை
பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கூச்சனூர் என்னும் ஊரில் 05.06.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் வெள்ளையன், குப்பம்மாள் ஆகும். தம் ஊருக்கு அருகில் உள்ள வேப்பம்பட்டி என்னும் ஊரில் அமைந்திருந்த அரசு இடைநிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பினையும் அதனையடுத்து உயர்நிலைக் கல்வியை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றவர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் புகுமுக வகுப்பினை நிறைவுசெய்த(1968) வெ.முருகன் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள வளனார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயில நினைத்தவர். ஆனால் அங்குப் பயில்வதற்கு இடம் கிடைக்காத காரணத்தால் தருமபுரி அரசு கல்லூரியில் இளம் அறிவியல் – கணக்குப் பாடத்தினை எடுத்துப் பயின்றவர்(1968-1971). 1971 முதல் 1973 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுந்தரராசன் தலைமையில் இயங்கிய ஆங்கிலத்துறையில் முதுகலையைப் பயின்று, பட்டம் பெற்றவர்.
தம் முதுகலைப் படிப்பிற்குப் பிறகு 1973 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர். அதனை அடுத்து விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி, குடியேற்றம் திருமகள் கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி முதலான கல்லூரிகளில் பணியாற்றியவர். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் பணியைத் தொடங்கித், துறைத்தலைவர் வரை உயர்ந்து 2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர்.
பேராசிரியர் வெ. முருகன் தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளும் நோக்கிலும் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வியல் நிறைஞர் வகுப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைந்து, ஒப்பிலக்கிய அறிஞர் சச்சிதானந்தன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்டவர்(1976-1977). அறிஞர் வை. சச்சிதானந்தனின் நெறிகாட்டல் ஆய்வுப்பட்டத்துக்கு மட்டும் என்று அமையாமல் வாழ்நாள் முழுமைக்கும் அமைந்துவிட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைபுலமை பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் படிப்பு மிகுந்த உதவியாக இருந்தது. அறிஞர் தமிழண்ணல், அறிஞர் மு.சண்முகம் பிள்ளை போன்றவர்களின் நெறிகாட்டலும் நட்பும் இவரைத் தமிழின் பக்கம் திருப்பியது. பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் வெ. முருகன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தினார் (அறிஞர் அன்னி தாமசு அவர்களும் பேராசிரியர் பிரபாகர ரெட்டி அவர்களும் இவ்வாய்வில் துணைநின்ற அறிஞர்கள் ஆவர்).
வெ.முருகன் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றிருந்தும், தமிழ் இலக்கியங்களின் அறிமுகம் நன்கு அமைந்திருந்தும் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களை மொழிபெயர்க்க வேண்டுமெனில் இருபதாம் நூற்றாண்டு மொழியியல் செய்திகள் அறிமுகம் ஆகியிருத்தல் வேண்டும் என்ற தெளிவுடன் ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டய வகுப்புகளில் இணைந்து மொழியியல் செய்திகளைக் கற்று, உண்மைகளை அறிந்தவர். சங்க இலக்கியப் பின்புலம் இல்லாமல் தொல்காப்பியத்தை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது என்று சங்க இலக்கியங்களையும் பிற தமிழ் இலக்கியங்களையும் உரையின்றிப் படித்து நிறைபுலமை பெற்றவர். அதன் பிறகு ஈராண்டுகளுக்கும் மேல் முழுமையாக உழைத்து, தொல்காப்பியத்தை மொழிபெயர்த்து ஆசியவியல் நிறுவனம் சார்பில் வெளியிட்டவர். பின்னர் இந்த நூல் செம்மையாக்கம் செய்யப்பெற்று செம்மொழி நிறுவனத்தின் வழியாகவும் வெளிவந்துள்ளது அதுபோல் செம்மொழி நிறுவனத்தின் வாயிலாக இவரின் கலித்தொகை மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது.
வெ. முருகன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்து அகராதியின் விரிவாக்கப் பதிப்பிலும் பணிபுரிந்தவர். இதுவரை இவர் மொழிபெயர்ப்பிலும் ஆசிரியத் தன்மையிலும் 34 நூல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வரைந்துள்ளார். இவர் மேற்பார்வையில் எண்மர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று ஆராய்ச்சிப் பணிகளை நிறைவுசெய்து அளித்துள்ளார். ஆசியவியல் நிறுவனத்திலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும் சிறப்பு நிலை அறிஞராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவர்தம் மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி இரண்டு முறை விருதளித்துப் பாராட்டியுள்ளது.
பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் 1976 ஆம் ஆண்டு தேன்மொழி அவர்களை இல்லறத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு முல்லை, பாரி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் உயர்கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர்.
மொழிபெயர்ப்புப் பணியிலும் அகராதிப் பணியிலும் ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபட்டுத் தமிழுக்கு அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் பேராசிரியர் வெ. முருகன் என்னும் இப் பெருமகனாரைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டுதல் தலைக்கடனாகும்.
பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் அறிவுக்கொடை
Books Published
1.
Oxford English – English – Tamil Dictionary. (1650 pages), New Delhi: Oxford
University Press, 2009.
2.
Oxford Compact English – English – Tamil Dictionary. (1000 pages), New
Delhi:
Oxford University Press, 2015.
3.
Oxford Mini English – Tamil Dictionary. (654 pages), New Delhi: Oxford
University Press, 2021.
4.
Oxford Dictionary of the Tamil Language (Tamil-Tamil-English). New Delhi:
Oxford University Press (under compilation)
5.
Applied Linguistic Readings of Tolkāppiyam. Central Institute of Classical
Tamil, 2023
6.
A Dictionary of Tamil Literary and Critical Terms (Tamil – English)
(6000 words). Chennai: Institute of Asian Studies, 1999.
7.
Pals Tamil e-Dictionary (Tamil – Tamil – English) (49000 words) Chennai:
Palaniappa Brothers, 2004.
8.
Pals Tamil – Tamil – English Dictionary, Chennai: Palaniappa Brothers, 2009.
9.
Lexicographic Practice in Tamil: Problems and Prospects (dictionary
criticism) (370 pages) Chennai: Institute of Asian Studies, 2006.
10.
Tolkappiyam in English (with complete text, transliteration, illustrative notes
and glossary) (711 pages). Chennai: Institute of Asian Studies, 2000.
11.
Kalittokai in English (with critical introduction, text, transliteration, notes
and
glossary) (738 pages), Chennai: Institute of Asian Studies, 1999.
12.
Tirukkural in English, Chennai: New Century Book House, Third Edition, 2015.
13.
Narrinai in English (Editor and prose translator) (1970 pages). Chennai:
Central
Institute of Classical Tamil, 2011.
14.
Paripatal in English, (prose translation), Chennai: Central Institute of
Classical
Tamil 2022.
15.
Kulothungan's Journey of Man (Maanuda Yaathirai in English), Chennai: New
Century Book House, 2013.
16.
Shower of Poetry (Selected Poems of Kalaignar M. Karunanidhi) Coimbatore:
Bharathiar University, 2009.
17.
Selected Poems of Bharathidasan (in English) (310 pages) Chennai:
International
Institute of Tamil Studies, 1994.
18.
An Unending Ascent (Selected Poems of Kulothungan (V.C. Kulandaiswamy) in
English,
for VCK Educational and Research Foundation). Chennai: Pavai
Publications, 2002.
19. The Wandering Voice (Translation of Three Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1988.Best Translation Award winner.
20.
The Art of Drumming (Translation of a musical treatise into English) Chennai:
Institute of Asian Studies, 1989.
21. The Dateless Muse (Translation of Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1989. Best Translation Award winner.
22.
The Unsung Melodies (Translation of Tamil ballads into English) Chennai:
Institute of Asian Studies, 1990.
23.
Contribution to Subramania Bharati (English Translation). Vols I & II.
Vol.I
2016; Vol II 2017. New Delhi: Sahitya Akademi.
24.
English Grammar Just for you (with grammatical concepts and rules translated
into Tamil for the benefit of learners in Tamil medium institutions). Trans: V.Murugan, New Delhi: Oxford University Press, 2015
Editorial Work
1. Editor, Narrinai in English, Central Institute of Classical Tamil, Chennai, 2011.
2.
Editor, Tolkappiyam in English, Central Institute of Classical Tamil, Chennai.
2021
3. Editor Kalittokai in English. Central Institute of Classical Tamil, 2023
4.
Editor. Rev. G.U.Pope : Thirukkural in English (along with a non metrical verse
translation,
transliteration and introduction) (850 pages). Chennai: Institute of
Asian Studies, 2018.
5.
Co-editor. Kalaignar Karunanidhi in English Translation. 12 volumes.
Bharathiar University, Coimbatore 2009.
6.
Editor, Siddha Medicine, Vols I to VII. Chennai : Tamil Valarchi Kazhagam,
2010-16.
7.
Associate Editor, The Encyclopaedia of Tamil Literature. Vol. I. Chennai:
Institute of Asian Studies, 1990
8.
Associate Editor, Journal of Asian Studies (from 1986 to 1989) Chennai:
Institute of Asian Studies.
9.
Associate Editor, Papers on Tamil Studies, Chennai: International Institute of
Tamil
Studies, 1981.
*** குறிப்பு: இக் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.