நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 2 மார்ச், 2013

வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியின் இணையத் தமிழ் சிறப்புப்பொழிவு





   வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் சிறப்புப்பொழிவு இன்று (02.03.2013) காலை 10 மணிக்குத் தொடங்கியது. கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். 

   தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வளர்மதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் விஜயலெட்சுமி அவர்கள் அறிமுகவுரையாற்றினார். கல்லூரியின் வரலாற்றுத் துறைத்தலைவரும் பொறுப்பு முதல்வருமான பேராசிரியர் மங்கையர்க்கரசி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் சுஜாதா அவர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்களும், மருத்துவர் பத்மா சமரசம் அவர்களும் வருகைதந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். 

முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு இணையத் தமிழைச் சற்றொப்ப இரண்டுமணிநேரம் அறிமுகம் செய்தார்.


மு.இளங்கோவன் உரை அருகில் மருத்துவர் பத்மா, வழக்கறிஞர் சமரசம், பேராசிரியர்கள்


பேராசிரியர்  வளர்மதி வரவேற்புரை


பேராசிரியர் மங்கையர்க்கரசி வாழ்த்துரை

முனைவர் விஜயலெட்சுமி அவர்கள் அறிமுகவுரை



தொகுப்புரை முனைவர் சுஜாதா




பங்கேற்ற மாணவிகள்


வழக்கறிஞர் சமரசம், மருத்துவர் பத்மா, பேராசிரியர்கள், மாணவிகள்

படங்கள் உதவி: ஒளி ஓவியர் இரமேஷ் பாபு (வேலூர்)

கருத்துகள் இல்லை: