நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 மார்ச், 2013

திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்



திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியும், திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகமும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளன.  வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.க.சு.சி. தியாகபாரி அவர்களின் தலைமையில் தொடக்கவிழா நடைபெறும். திரு.மு.வடுகநாதன், திரு.அ.மோகன்தாசு ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெறும்.

வேலுடையார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் திலக பார்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்கவும், பெரியார் பார்வை இதழாசிரியர் திரு. கவி அவர்கள் அறிமுகவுரையாற்றவும், இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பொதுச்செயலர் திரு.எண்கண் சா.மணி அவர்கள் நன்றியுரையாற்றவும் புலவர் சீனி. கோவிந்தராசு அவர்கள் தொகுப்புரை வழங்கவும் உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரையாளராகக் கலந்துகொண்டு கல்வியியல் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் இணையத்துறையை அறிமுகம் செய்ய உள்ளார். ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.

நாள்:23.03.2013 சனிக்கிழமை
நேரம் காலை 10 மணி
இடம்: வேலுடையார் கல்வியியல் கல்லூரி, திருவாரூர்

தொடர்புக்கு:
புலவர் எண்கண். சா. மணி அவர்கள்
அண்ணாநகர், இலவங்கார்குடி, ,திருவாரூர் – 610 104
செல்பேசி: 9750611471

கருத்துகள் இல்லை: