நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 ஜூன், 2008

திருநெல்வேலிக் கருத்தரங்கு நா.கணேசன் உரை...

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் நா.கணேசன் அவர்கள் :
தமிழ்மணத்தைக்காசி அவர்கள் தொடங்கும் பொழுது 100 அளவில் பதிவர்கள் இருந்தனர்.இன்று 4000 பேர் பதிவர்கள் உள்ளனர். நாள்தோறும் இன்று பலர் இணைகின்றனர்.இதில் பல வசதிகள் உள்ளன.

தமிழ் வளர்த்த பல பெரியவர்கள் வாழ்ந்த பகுதி நெல்லைப்பகுதி.குமரகுருபரர் போன்ற தமிழ் முனிவர் பிறந்த பகுதி இது.நெல்லையில் வாழ்ந்த பல அறிஞர்களை நினைவுகூர்ந்தார்.
பொதியம்(புறம்)
என இப்பகுதி வழங்கப்பட்டது.
தமிழ் ஆர்வலர்கள் பலர் இணையத்தில் இயங்க வேண்டும்.
பல துறைகளிலும் இணையம் பாடப்பகுதியாக அமைக்கப்பட வேண்டும்.
இணையத் தமிழை வளர்க்கவேண்டும்.

புரியாத ஆங்கிலத்தில் பேசினால் உயர்வு என நினைக்கும் போக்கு மாறவேண்டும்.
நாம் எழுதும் கட்டுரைகள் பிற இதழ்களில் வெளிவரும்பொழுது மாற்றத்திற்கு உபட்டுவிடுகிறது.
நாமே பதிவில் நம் விருப்பம்போல் நம் படைப்புகளை வெளியிட பதிவு உதவுகிறது.

கணினியில் தமிழ் வளர்ச்சி
தமிழ் எழுத்துருக்கள் வரலாறு
ஆதம் ஆஸ்போர்ன்,ஜார்ஜ்கார்ட்,கூப்பர்,பெ.குப்புசாமி,முத்துநெடுமாறன்,உமர் 'தேனீ'இயங்கு எழுத்துரு. பற்றி விளக்கினார்.

குறியேற்ற(encoding) முறைகளின் சரித்திரம்
திஸ்கி,டாப்,டேம்,யுனிகோடு பற்றி விளக்கினார்.

யாகு,கூகுள்,தமிழ் கூறும் வலைப்பதிவுலகு பற்றி விளக்கினார்.

Tamil Within 16-bit multilingual unicode பற்றி எடுத்துரைத்தார்.

குமுதம்,விகடன் யுனிகோடுக்கு மாறியுள்ளதை நினைவுகூர்ந்தார்.

ஒரு விளக்கை வாங்கிக்கொண்டு போய் அதற்குரிய துளையில் பொருத்தும்பொழுது பொருந்துகிறது.உலக அளவில் இது ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதுபோல் தமிழ் எழுத்துகள் ஒரேவடிவில் எழுதும்படி ஒருங்குகுறி வேண்டும்.

தமிழ் 99 விசைப்பலகை சிறந்தது.அதனை அனைவரும் பயன்படுத்தவேண்டும்.
(இதன் விளக்கத்தை நானும் அவைக்கு விளக்கினேன்.அனைவரும் வியந்தனர்.பாராட்டினர்)

கருத்துகள் இல்லை: