நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

முனைவர் பி. தமிழகன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா!

 

முனைவர் பா.மதிவாணன்  நூலினை வெளியிடுதல்

முனைவர் மு.இளங்கோவன் நூலினை வெளியிடுதல்


மலேசியக் கவிஞர் செ.குணாளன் நூலினைப் பெற்றுக்கொள்ளுதல்

 முனைவர் பி. தமிழகன் அவர்கள் எழுதிய சங்க இலக்கியத்தில் நிலைத்திணைப் பெயர்கள், மரபுப்பெயர்களும் சங்க இலக்கியமும் என்னும் தலைப்பில் அமைந்த நூல்களின் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளியில் 21.02.2026 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த  நிகழ்வுக்கு அருள்முனைவர் அமுதன் அடிகளார் தலைமை தாங்கினார். பேராசிரியர் கு. திருமாறன் வரவேற்புரை நல்கினார். சங்க இலக்கியத்தில் நிலைத்திணைப் பெயர்கள் என்னும் நூலினைப் பேராசிரியர் பா. மதிவாணன் வெளியிட மருத்துவர் இரா. கலைக்கோவன் பெற்றுக்கொண்டார். மரபுப்பெயர்களும் சங்க இலக்கியமும் என்னும் நூலினை முனைவர் மு.இளங்கோவன் வெளியிட, பொறியாளர் ஓவியன் பெற்றுக்கொண்டார். இவர்களைத் தொடர்ந்து தமிழறிஞர்களும், பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சார்ந்த பேராளர்களும் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். மலேசியாவிலிருந்து வருகைபுரிந்த கவிஞர் செ.குணாளன் அவர்கள் நூல்களின் சிறப்புப் படிகளைப் பெற்றுக்கொண்டார். அறிஞர்களின் வாழ்த்துரைக்குப் பிறகு முனைவர் பி. தமிழகன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.


கருத்துகள் இல்லை: