நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 டிசம்பர், 2012

தமிழ் இணைய மாநாடு இனிதே தொடங்கியது…



தமிழ் இணையமாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று 28.12.2012 காலை 10 மணிக்குத் தொடங்கியது. மக்கள் அரங்கத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார். முனைவர் நக்கீரன், அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், பேராசிரியர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். பிற்பகல் உணவுக்குப் பிறகு தமிழ் இணைய அறிமுகம், வலைப்பூ உருவாக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை: