நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 டிசம்பர், 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு





அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 2012, திசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள் நடைபெற உள்ளது. ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் மாநாட்டு நிகழ்வுகள் இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மா. இராமநாதன் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார்கள். பன்னாட்டு அறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கவும் ஆய்வுரை வழங்கவும் உள்ளனர். திரு.மோகன் கோபாலகிருட்டினன் அவர்கள் மையக் கருத்துரை வழங்கவும், உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.மணி.மணிவண்ணன் அவர்கள் தலைமையுரை வழங்கவும் உள்ளனர். பேராசிரியர் கணேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, வரவேற்புரை வழங்க உள்ளார்.

நிறைவு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இரா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தலைமையுரையாற்றவும், முனைவர் பொன்னவைக்கோ(துணைவேந்தர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்) அவர்கள் நிறைவுரையாற்றவும் உள்ளனர். பேராசிரியர் அரங்க.பாரி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்ற உள்ளார். பேராசிரியர் மா. கணேசன், வள்ளி. ஆனந்தன்(கணித்தமிழ்ச்சங்கம்), முனைவர் கா.மு.சேகர், முனைவர் க. பசும்பொன், முனைவர் ந.நடராஜ பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.



மாநாட்டு விவரங்கள் அறிய கீழ்வரும் இணைப்பு உதவும்:

மாநாட்டில் படிக்கப்பெற உள்ள கட்டுரைகள் குறித்த விவரத்திற்குக் கீழ்வரும் இணைப்பு உதவும்:

கருத்துகள் இல்லை: