நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 15 செப்டம்பர், 2012

மென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா



பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் பல்லாண்டு உழைப்பில் உருவான மென்பொருள் மென்தமிழ் ஆகும். கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக மென்தமிழ் விளங்குகின்றது. உலக அளவில் பலராலும் இந்த மென்பொருள் பாராட்டப்பட்டுள்ளது.

மென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா 20.09.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் நடைபெறுகிறது.

முனைவர் மு. பொன்னவைக்கோ தலைமையில் நடைபெறும் விழாவில் இல.சுந்தரம் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் ந.தெய்வசுந்தரம் அறிமுகவுரையாற்றுகின்றார்.

உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் திரு. தி. ஸ்ரீதர் அவர்கள் மென்பொருளை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகின்றார். முதலிரு படிகளை முனைவர் ப.அர.நக்கீரன் அவர்களும், முனைவர் மு.முத்துவேலு அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். முனைவர் நா.சேதுராமன் வாழ்த்துரை வழங்குகின்றார்.
நன்றியுரை கோ.பாக்யவதி இரவி அவர்கள்.

இவ் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு, சிறப்பிக்கலாம்.

குறிப்பு: வெளியீட்டுவிழாவின்போது மட்டும் மென்தமிழ் 50% கழிவு விலையில் 1000/- உரூபாய்க்கு வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை: