நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 டிசம்பர், 2007

புதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா

புதுச்சேரி நண்பர்கள் தோட்ட அமைப்பினர் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழாவை இன்று 29.12.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடத்துகின்றனர்.

சுந்தரமுருகன் வரவேற்க ப.திருநாவுக்கரசு தலைமையில் விழா நடைபெறுகிறது. இயக்குநர் தங்கர்பச்சான்.நடிகர் சத்தியராசு,நடிகர் அர்ச்சனா,படத்தொகுப்பாளர்பி.இலெனின்,இசையமைப்
பாளர் பரத்வாசு கலந்துகொண்டு பாராட்டுப் பெறுகின்றனர்.புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் விருது வழங்கிப் பாராட்ட உள்ளார்.

நண்பர்கள் தோட்டம் வெளியிடும் நாள்காட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமதாசு அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அனந்தராமன்,இரா.சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

முனைவர் நா.இளங்கோ, க.தமிழமல்லன், இரா.தேவதாசு,புதுவை யுகபாரதி பாராட்டுரை வழங்குகின்றனர். மு.சச்சிதானந்தம் அவர்கள் நன்றியுரை கூற உள்ளார்.புதுவையில் உள்ள பல்வேறு தமிழமைப்புகள்,கலை,இலக்கிய அமைப்புகள் சார்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை: