நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 8 டிசம்பர், 2007

விடிந்தால் திருமணம்....

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ்வலைப்பதிவு நண்பர்களே!

நாளை (09.12.2007) ஞாயிறு காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
புதுச்சேரியில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையும், மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நிறைவு விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறன.100 கணிப்பொறி ஆர்வலர்கள் பயிற்சி பெறுகின்றனர். புதுவை, தமிழகம், மைசூர், பெங்களூரு முதலான இடங்களிலிருந்து பயிற்சிபெற பலர் வருகின்றனர்.

புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர். பட்டறை நிகழ்வுகள் உடனுக்குடன் உலகுக்கு அறிவிக்கும்படி இணைய ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியை வாழ்த்துங்கள் நண்பர்களே!

1 கருத்து:

பகீ சொன்னது…

வாழ்த்துக்கள்.