தமிழ் மலர் நாளிதழ், மலேசியா (09.08.2025)
நெல்லை இரா. சண்முகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தேனீ என்னும் பெயரில் மாத இதழ் 1965, செப்டம்பரில் வெளிவந்துள்ளதை அறிய முடிந்தது. இந்த இதழ் குறித்து விரிவாக ஆராய வேண்டும் என்ற நோக்கில் கிடைத்த குறிப்புகளை வைத்து ஒரு கட்டுரையை உருவாக்கினேன். மலேசியாவிலிருந்து வெளிவரும் தமிழ் மலர் நாளிதழ் அக்கட்டுரையை இன்று (09.08.2025) வெளியிட்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. தமிழ் மலர் இதழின் ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தேனீ இதழைப் பாதுகாக்கும் அன்பர்கள் அதன் படியை வழங்கி உதவினால் மேலாய்வுகளுக்கு வழிவகுக்கும்.
தொடர்புக்கு: muetamil@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக