திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடைபெற்று வருகின்றது. முதல் பரிசு பெறும் மாணவருக்கு ஒரு பவுன் மதிப்புடைய தங்கப்பதக்கமும், அரிராம் சேட்டு நினைவுச் சுழற்கோப்பையும் பரிசாக அளிக்கப்பெறும்.
அவ்வகையில் 1992, 1994 ஆகிய இரண்டு ஆண்டுகள் நான் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் முதல் பரிசு பெற்றன. இரண்டு முறை தங்கப்பதக்கமும், வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றேன்.
காலங்கள் உருண்டோடின….
2025 ஆம் ஆண்டுக்கான கட்டுரைப் போட்டிக்கு நான் எழுதிய நூல்கள் கட்டுரைப்போட்டியின் தலைப்பாகியுள்ளது. என்னின் சில நூல்களைக் கிழமைதோறும் அறிஞர் பெருமக்கள் அறிமுகம் செய்து பேச உள்ளனர். பாளையங்கோட்டைத் திருவனந்தபுரம் சாலையில் உள்ள மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் 26.07.2025 முதல் பத்து வாரங்கள் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. வாய்ப்புடைய அன்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கலாம்.
தொடர்புக்கு:
பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
பேசி:
7598399967
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக