சீர்காழி (கொள்ளிடம்) செம்மொழி இலக்கிய மன்றம் சார்பில் கொள்ளிடம், செம்மொழி அரங்கில் தொல்காப்பிய வாழ்வியல் சிந்தனைகள் – சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலர் முனைவர் மு. இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும் மாணவர்கள் பங்குபெறும் “எங்கள் ஊர் “ என்னும் தலைப்பிலான பேச்சுப்போட்டியும் அறிஞர்களின் கருத்துரைகளும் இடம்பெற உள்ளன. தமிழார்வலர்களைச் செம்மொழி இலக்கிய மன்றம் அன்புடன் அழைக்கின்றது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கவிஞர் சீர்காழி உ. செல்வராசு, சிங்கப்பூர்
நாள்:20.07.2025,ஞாயிற்றுக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் 2 மணி வரை.
இடம்:
செம்மொழி அரங்கு, முதன்மைச்சாலை, கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக