நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

முருகு. சுப்பிரமணியனார் அவர்களின் திருமகனாருடன் மலேசியாவில் ஒரு சந்திப்பு

மு.இ, சுப. செல்வம், திருவாட்டி சந்திரா செல்வம்

பொன்னி என்னும் இலக்கிய இதழை வெளியிட்டு(1947-53), தமிழகத்திலும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் புகழ் பெற்ற  முருகு சுப்பிரமணியம் அவர்களுடைய மூத்த புதல்வரும், மலேசியாவின் ஆர்டிஎம்-ல் வானொலி தமிழ்ச் செய்திப் பிரிவு தலைவராகவும் ஆர்டிஎம் தொலைக் காட்சிச் செய்திப் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவருமான திரு செல்வம்அவர்களும் அவர்களின் துணைவியார் திருவாட்டி. சந்திராசெல்வம் அவர்களும் மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு நான் வந்துள்ளதை அறிந்து மாநாட்டுக் கூடத்திற்கு வருகை தந்தனர். அவர்களின் அன்புக்கு யான் யாது கைம்மாறு ஆற்றுவேன்?. இருபதாண்டுகளுக்கு முன் நான் செய்த முனைவர் பட்ட ஆய்வு குறித்த நினைவுகளை அசைபோட்டோம். குடந்தை. ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு விளக்கும் ஆவணப்படத்தை அவர்களுக்குக் கையுறையாக அளித்து மகிழ்ந்தேன்.

கருத்துகள் இல்லை: