நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தருமபுரியில் முப்பெரும் தமிழ்விழா

தருமபுரியில் மருத்துவர் கி. கூத்தரசன் அவர்களின் முயற்சியில் தகடூரான் தமிழ் அறக்கட்டளை செயல்படுகின்றது. இவ்வறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ் நிகழ்ச்சிகளைத் தருமபுரியில் தொடர்ந்து நடத்தி வருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டு தமிழறிஞர் தகடூரான் கா.சி.கிருட்டிணன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் விழா, தகடூரான் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார் நூல் வெளியீட்டு விழாமாந்த நேயர்களுக்குப் பாராட்டு விழாவினை நடத்துகின்றது. தமிழார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


நாள் : 20.10.2012 சனிக்கிழமை             
இடம் : வன்னியர் திருமண மண்டபம், தருமபுரி
காலம்: காலை 10.30 மணி

வரவேற்புரை:   திரு.க.நஞ்சப்பன்,
தலைவர், தகடூரான் தமிழ் அறக்கட்டளை.

தலைமை - சிறப்புரை :

இலக்கணச் செம்மல், தவமுனைவர்
புலவர் இரா.இளங்குமரனார்
(நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சிராப்பள்ளி)

தலைப்பு: முப்பாலில் முத்திரைத் திருக்குறள்

தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியீடு - திரு.ம.பொன்னிறைவன்
(தலைவர், திருமழபாடி தமிழ்ச் சங்கம்)

பாராட்டுரை :  
குறள்நெறிச் செல்வர், ஆய்வுவேந்தர்,  முனைவர் அ.ஆறுமுகம்,
(தலைவர், திருமழபாடி தமிழ்ச் சங்கம்)

முதல் நூலினைப் பெறுபவர் :
திரு. பொறிஞர் அறவாழி, (உலகத் தமிழ்க் கழகம், சேலம்)
                        .


திரு. முனைவர் அ.ஆறுமுகனாரின்
தமிழாய் வாழும் தவமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பாடல்:

திரு.அருட்கவி புலவர் செம்மங்குடி துரையரசன்
(செயலர், திருவள்ளூர் தமிழ்ச் சங்கம்)

தகடூரான் தமிழ் அறக்கட்டளை வழங்கும் பாராட்டு விழா

 விருது பெறுவோர்:


 மனிதநேயச் சிந்தனையாளர்
திரு.ம.பொன்னிறைவன்
(துணைத்தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு, திருச்சிராப்பள்ளி)

திரு. த.செந்தில் குமார்
(செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி)

திரு. எ.இராமர்
(தலைவர், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க அறக்கட்ளை)

திரு. மா.இராமமூர்த்தி
(பால் கூட்டுறவு சங்கம், அதிகாரப்பட்டி)

 மனிதநேய மருத்துவர்


மருத்துவர் திரு.அ.செந்தில்
(உலகமதி மருத்துவமனை, நெய்வேலி)

மருத்துவர் திரு.இரா.சரவணன்
(தோலியல் மருத்துவர், கோவை)


விருது பெறுவோர் ஏற்புரை:
                       
நன்றியுரை: மருத்துவர் கி.கூத்தரசன்
(செயலர், தகடூரான் தமிழ் அறக்கட்டளை)

கருத்துகள் இல்லை: