நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 11 அக்டோபர், 2012

சென்னையில் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி




சென்னையில் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி  13.10.2012, 14.10.2012 ஆகிய இரண்டு நாள்(காரி, ஞாயிறு) நடைபெறுகின்றது. 13.10.2012 மாலை 4 மணிக்குத் தொடங்கும் கண்காட்சி மறுநாளும் நடைபெறுகின்றது.

உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலான தமிழக வரலாறு, 64 கலைகள், இசைக்கருவிகள், இலக்கிய நூல்கள், உணவுகள் குறித்த காட்சி விளக்கம் கண்காட்சியில் இடம்பெறும்.

முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றுகின்றார். முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கலியரத்தினம், பேராசிரியர் இ. வேலம்மாள், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், திரு. த. வெள்ளையன், திரு. நா. அருணாசலம், மருத்துவர் தெ. வேலாயுதம், திரு. எம். ஆர் செந்தில்நாதன், திரு. இரா. மோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.

இடம்: இராசா திருமண மண்டபம், கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு

நிகழ்ச்சி ஏற்பாடு:
தமிழகப் பெண்கள் செயற்களம், சென்னை
பேசி: 90944 30334

கருத்துகள் இல்லை: