நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 4 அக்டோபர், 2012

உள்கோட்டை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா




அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் கங்கை கொண்டசோழபுரத்தை அடுத்துள்ள உள்கோட்டை அரசுத் தொடக்கப் பள்ளி (நூற்றாண்டு விழா), உயர்நிலைப்பள்ளி (பொன்விழா)யில் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து பள்ளியின் நூற்றாண்டு விழாவையும், பொன்விழாவையும் கொண்டாட உள்ளனர்.

நாள்: 06.10.2012(காரிக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ப.செந்தில்குமார் இ.ஆ.ப., திரைப்பா ஆசிரியர் பா.விஜய், கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர். 

இப்பள்ளியில் நாற்பதாண்டுகளுக்கு முன் பணி செய்த திரு. ஐ.நீதியப்பன் ஆசிரியர்(இராஜாவூர், கன்னியாகுமரி) அவர்கள் அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளார். 

இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பணியாற்றிய ஆசிரியப் பெருமக்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: