நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 11,12,13-02.2011 ஆகிய நாள்களில் நடைபெறுகின்றது.

தமிழகம்,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,இலண்டன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர்.

இன்று(11.02.2011) காலை பத்து மணிக்குப் புதுச்சேரிப் பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், அதன்பிறகு புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் கவிப்பொழிவு நிகழ்த்தியும் விழா நடைபெறும்.

தொடக்க நிகழ்வு பல்கலைக்கழக அரங்கில் பகல் இரண்டு மணிக்குத் தொடங்குகிறது.
நடுவண் அமைச்சர் சா.செகத்ரட்சகன், முனைவர் க.ப.அறவாணன், திரு.சுகி.சிவம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

நாளை நடைபெறும் நிகழ்வில் பேராசிரியர் அப்துல்காதர், அமுதன் அடிகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். சொர்ணமால்யாவின் நாட்டிய நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வும் நடைபெற உள்ளது.

கருத்தரங்க அமைப்பாளர்
முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்.
தொடர்புஎண் + 91 9360327019

கருத்துகள் இல்லை: