நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 15 மார்ச், 2010

முனைவர் இரா.திருமுருகனார் பிறந்த நாளும்,நூல் வெளியீட்டு விழாவும்


முனைவர் இரா.திருமுருகனார்(16.03.1929-03.06.2009)

புதுச்சேரித் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் தமிழிலக்கணமும் இசையும் அறிந்த பேரறிஞர்.அன்னாரின் பிறந்த நாள் விழா 16.03.2010 செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியில் கொண்டாடப்பட உள்ளது.மேலும் ஐயாவிடம் யாப்பறிவு பெற்ற அம்மா மாநி அவர்களின் குறளாயிரம் என்ற குறட்பா நூல் வெளியீடும் நடைபெற உள்ளது.

இடம்: இரெவே சொசியால் மன்றம்,இலப்போர்த் வீதி,புதுச்சேரி,
நாள்: 16.03.2010 நேரம்: மாலை 6 மணி

தலைமை: பாட்டறிஞர் இலக்கியன்
தமிழ்த்தாய் வாழ்த்து ஈகியர் மு.அப்துல் மசீது
வரவேற்புரைஅ.முத்துசாமி

வாழ்த்துரை:
வில்லிசை வேந்தர் இ.பட்டாபிராமன்
தமிழ்மாமணி துரைமாலிறையன்
பாவலர் சு.சண்முகசுந்தரம்

குறளாயிரம் வெளியீடு: திருவாட்டி யமுனா அம்மையார்(திருமுருகனாரின் துணைவியார்)
முதல்படி பெறுதல்: திரு இரா.தி.அறவாழி (திருமுருகனாரின் மகன்)

தொகுப்புரை: பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்
நன்றியுரை வெ.கிருட்டினகுமார்

நான் மாநியின் குறளாயிரம் நூலை ஆய்ந்து ஆய்வுரை நிகழ்த்த உள்ளேன்(முன்பே என் வலைப்பதிவில் நூல் மதிப்புரை வெளியிட்டுள்ளேன்).

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இறைமைத் திருவருள் துணைநிற்க!