இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
நாள்: 15.05.2012(செவ்வாய்க்கிழமை) நேரம: மாலை 6 மணி
தலைமை: புலவர் வி.திருவேங்கடம்
வரவேற்பு: முனைவர் பக்தவத்சல பாரதி
வாழ்த்துரை: பேராசிரியர் மு.இராமதாசு
சிறப்புரை: முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
தலைப்பு: தீந்தமிழ்க் காவலர் முனைவர் இரா.திருமுருகனாரும் தமிழிசையும்
நன்றியுரை: முனைவர் த.பரசுராமன்
நிகழ்ச்சி அமைப்பு: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
முனைவர் இரா.திருமுருகனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முனைவர் இரா.திருமுருகனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 10 மே, 2012
வெள்ளி, 3 ஜூன், 2011
இலக்கணச்சுடர் முனைவர் இரா.திருமுருகனார் இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள்
இலக்கணச்சுடர் முனைவர் இரா.திருமுருகனார்
(16.03.1929 - 03.06.2001)
தமிழ் இலக்கணத்திலும், இசையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடி புலமைபெற்றுப் பெரும்புகழுடன் விளங்கிய மூத்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று(03.06.2011) புதுச்சேரியில் அவர் இல்லத்தில் நினைவுகூரப்பட்டது. புதுச்சேரி, எண் 62,மறைமலையடிகள் சாலையில் உள்ள பாவலர் பண்ணை இல்லத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. புதுவைத் தமிழறிஞர்களும், குடும்பத்தாரும் கலந்துகொண்டு ஐயாவின் நினைவினைப் போற்றினர்.
04.06.2011(காரி)சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை இரா.திருமுருகனார் நினைவு அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ளது.
புலவர் செ.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றவும்,முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் தலைமையுரையாற்றவும் புலவர் அரங்க.நடராசனார் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் திருமுருகனார்: புலவர், கலைஞர், போராளி என்ற தலைப்பில் அறக்கட்டளைப் பொழிவு நிகழ்த்த உள்ளார்.
முனைவர் க.இரவிசங்கர் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.
இடம்: மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனம், இலாசுப்பேட்டை,புதுச்சேரி
நாள்: 04.06.2011 நேரம் முற்பகல் 10.30 முதல் பகல் 1-00 மணி வரை
திங்கள், 15 மார்ச், 2010
முனைவர் இரா.திருமுருகனார் பிறந்த நாளும்,நூல் வெளியீட்டு விழாவும்
முனைவர் இரா.திருமுருகனார்(16.03.1929-03.06.2009)
புதுச்சேரித் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் தமிழிலக்கணமும் இசையும் அறிந்த பேரறிஞர்.அன்னாரின் பிறந்த நாள் விழா 16.03.2010 செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியில் கொண்டாடப்பட உள்ளது.மேலும் ஐயாவிடம் யாப்பறிவு பெற்ற அம்மா மாநி அவர்களின் குறளாயிரம் என்ற குறட்பா நூல் வெளியீடும் நடைபெற உள்ளது.
இடம்: இரெவே சொசியால் மன்றம்,இலப்போர்த் வீதி,புதுச்சேரி,
நாள்: 16.03.2010 நேரம்: மாலை 6 மணி
தலைமை: பாட்டறிஞர் இலக்கியன்
தமிழ்த்தாய் வாழ்த்து ஈகியர் மு.அப்துல் மசீது
வரவேற்புரைஅ.முத்துசாமி
வாழ்த்துரை:
வில்லிசை வேந்தர் இ.பட்டாபிராமன்
தமிழ்மாமணி துரைமாலிறையன்
பாவலர் சு.சண்முகசுந்தரம்
குறளாயிரம் வெளியீடு: திருவாட்டி யமுனா அம்மையார்(திருமுருகனாரின் துணைவியார்)
முதல்படி பெறுதல்: திரு இரா.தி.அறவாழி (திருமுருகனாரின் மகன்)
தொகுப்புரை: பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்
நன்றியுரை வெ.கிருட்டினகுமார்
நான் மாநியின் குறளாயிரம் நூலை ஆய்ந்து ஆய்வுரை நிகழ்த்த உள்ளேன்(முன்பே என் வலைப்பதிவில் நூல் மதிப்புரை வெளியிட்டுள்ளேன்).
புதன், 3 ஜூன், 2009
புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் உடல் மருத்துவமனைக்குக் கொடை
மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் வணக்கம் செலுத்துதல்
முனைவர் இரா.திருமுருகனார் உடல்
முனைவர் இரா.திருமுருகனார் உடல்
புதுவையில் வாழ்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியல் ஒரு மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார்.இந்தச் செய்தி உடனுக்குடன் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டது.அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளம் அமைப்பினர் இந்தச்செய்தி அறிந்து தங்கள் தளத்தின் முகப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அன்னாருக்குச் சிறப்புச் சேர்த்தனர்.
அதுபோல் உலகின் பல இணையத்தளங்களும் மறைந்த தமிழறிஞரின் வாழ்க்கைக்குறிப்பைப் படத்துடன் வெளியிட்டன.துபாய்.மலேசியா,குவைத்,இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்ந நண்பர்கள் மின்னஞ்சல் வழியாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.அதுபோல் தமிழறிஞர்கள் தமிழண்ணல்,பொற்கோ,இரா.இளவரசு,முனைவர் மு.இளமுருகன்,புலவர் தமிழகன் திரைப்பா ஆசிரியர் அறிவுமதி,அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன்,ஓவியர் வீரசந்தனம், எழுத்தாளர் செயபாசுகரன் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.மக்கள் தொலைக்காட்சியில் இந்தச்செய்தி ஒளிகபரப்பப்பட்டது.உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் இந்தச்செய்தி அறிவிக்கப்பட்டது.
தமிழகம்,புதுவை,காரைக்கால் சார்ந்த பல ஆசிரியர்கள் மாணவர்கள் முனைவர் இரா.திருமுருகனார் உடல் வைக்கப்பட்டுள்ள புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள பாவலர் பண்ணை இல்லத்திற்கு வந்து அக வணக்கம் செலுத்திவருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தமிழறிஞரின் இல்லத்திற்கு வந்து வணக்கம் செலுத்தி முனைவர் இரா.திருமுருகனாரின் துணைவியார் மற்றும் குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆறுதல் மொழிகளைத் தெரிவித்தார்கள்.
அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் மருத்துவர் ஐயா
மருத்துவர் ச.இராமதாசு வணக்கம் செலுத்துதல்
பொ.தி.ப.அறக்கட்டளையின் நிறுவனர் தி.ப.சாந்தசீலனார் அவர்கள் புலவரின் இலத்திற்கு வந்து வணக்கம் செலுத்தியதுடன் புலவரின் துணைவியாருக்கு ஆறுதல் சொன்னார்கள்.
புலவர் இரா.திருமுருகனார் அவர்கள் தமிழ் இலக்கணத்திலும் இலக்கியத்திலும்.இசையிலும் மிகப்பெரிய புலமை பெற்றவர்.இவர் சிந்துப்பாக்களின் யாப்பிலக்கணம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.சிந்துப்பாவியல் என்னும் இலக்கண நூல் படைத்தவர்.
புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவர்.தமிழ் வளர்ச்சிக்குத் தெளிதமிழ் என்ற இலக்கிய இதழையும் தமிழ்க்காவல் என்ற மின்னிதழையும் நடத்தி வருவபவர்.தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்து வந்தவர்.தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி நண்பர்களுடன் தமிழ் வளர்ச்சிப்பணிகளில் ஈடுப்பட்டவர்.பல்வேறு நாடுகளுக்குச்சென்று தமிழிசை பற்றி உரையாற்றி மீண்டவர்.அடுத்த மாதம் அமெரிக்கவில் பெட்னா விழாவில் கலந்துகொண்டு தமிழிசை பற்றி உரையாற்றத் திட்டமிட்டிருந்தார்.
இரண்டு மூன்று நாட்களாக மார்பு வலி ஏற்பட்டு மருத்துவம் பார்த்துவந்த புலவர் அவர்கள் நடு இரவில் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.அன்னாரின் உடல் எந்த வகையான சடங்குகளும் இன்றி மருத்துவ ஆய்வுக்குக்கொடையாக வழங்கப்பட உள்ளது.இதற்குரிய ஏற்பாட்டை ஐயா திருமுருகனார் முன்னரே செய்திருந்தார்.அதன் அடிப்படையில் மருத்துவர்கள் குழு முதலில் கண்களை எடுத்துச்சென்றது.மாலை நான்கு மணிக்கு முழு உடலும் புதுவை சிப்மர்(JIPMER) மருத்துவமனைக்கு அளிக்கப்பட உள்ளது.பிற்பகல் மூன்று மணியளவில் இரங்கல் கூட்டம் நடத்த தமழறிஞர்கள் முடிவுசெய்துள்ளனர்.
முனைவர் இரா.திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக
தி.ப.சாந்தசீலனார் வணக்கம் செலுத்துதல்
அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் தி.ப.சாந்தசீலனார்
இலக்கணக்கடல் முனைவர் இரா.திருமுருகனார் மறைவு
முனைவர் இரா.திருமுருகனார்
புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத்தெரிகிறது.புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை,62மறைமலையடிகள் சாலையில் உள்ள(புதுவைப்பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி
திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.
ஞாயிறு, 21 செப்டம்பர், 2008
புதுச்சேரி முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள்
முனைவர் இரா.திருமுருகனார் (16.03.1929)
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்.இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர்.இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர். அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். நாளும் தமிழுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார். இவர்தம் பெற்றோர் பெயர் அ.இராசு, இரா.அரங்கநாயகி. திருமுருக னாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும். தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.
இவர் பண்டிதம்(1951), கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப் பட்டயம் (1973), கலைமுதுவர், கல்வியியல் முதுவர், மொழியியல் சான்றிதழ் (1983), முனைவர் (1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர். 44 ஆண்டுகள் அரசு பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.
தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.
சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும், புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர். தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.
இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும், இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும், தமிழ்நலம் கெடும் இடங்களில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.
தமிழ்ப் பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர். என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியுள்ளன. சிந்துப் பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப் பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும். இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.
இலக்கணச்சுடர், இயலிசைச் செம்மல், முத்தமிழ்ச் சான்றோர், நல்லாசிரியர் (நடுவணரசு), மொழிப்போர் மறவர், சிந்திசைச் செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம், பாவேந்தர் பைந்தமிழ்க் காவலர் உள்ளிட்ட பட்டங்களும் விருதுகளும் குறிப்பிடத் தகுந்தன.
முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:
01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001
மொழி வளர்ச்சி
13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்--7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994
பாடல்
27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999
இசை
31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000
வரலாறு
35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003
முனைவர் இரா.திருமுருகனார் முகவரி:
முனைவர் இரா.திருமுருகனார்
ஏழிசைச்சூழல்,
62,மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி-605 001
பேசி : 0413- 2334391
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)