நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 22 மார்ச், 2010

செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகள் வழங்கும் விழா

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் குடியரசுத் தலைவரின் தொல்காப்பியர் விருது மற்றும் 15 இளம் அறிஞர் விருதுகளுக்கான 20 இலட்ச ரூபாய் பொற்கிழிகள் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி வரும் 28ஆம் தேதி சென்னையில் வழங்குகிறார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் அறிஞர் ஒருவருக்கு 5 இலட்ச உரூபாய் பொற்கிழியுடன் தொல்காப்பியர் விருதும், அயல்நாட்டு அறிஞர் ஒருவருக்கும், அயல்நாடு வாழ் இந்தியர் ஒருவருக்கும் தலா 5 இலட்ச உரூபாய் பொற்கிழி கொண்ட குறள்பீட விருதும் வழங்கப்பட உள்ளது.

மேலும் இளம் தமிழறிஞர்களிடையே தமிழ் ஆராய்ச்சித் திறனை வளர்த்திடும் நோக்கில் தலா ஒரு இலட்ச உரூபாய் பொற்கிழியுடன் 5 இளம் அறிஞர் விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி 2005 - 06ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெறுவோர் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இந்த விருதுகளை வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கவுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

நனி நன்றி: நக்கீரன் இணையத்தளம்

கருத்துகள் இல்லை: