நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
ஊரன் க்கான வினவலுக்கு தேதியின் முறையில் வரிசைப்படுத்தப்பட்ட இடுகைகளைக் காண்பிக்கிறது. தொடர்பான முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
ஊரன் க்கான வினவலுக்கு தேதியின் முறையில் வரிசைப்படுத்தப்பட்ட இடுகைகளைக் காண்பிக்கிறது. தொடர்பான முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2024

முனைவர் மு. இளங்கோவன் உருவாக்கிய மின் உள்ளடக்கங்கள் (E. Content)

 


 

தொல்காப்பியம், நாட்டுப்புறவியல் சார்ந்த அறிஞர்களின் உரைகளை / வாழ்வியலை ஆவணப்படுத்தி அறுபதுக்கும் மேற்பட்ட காணொலிப் படைப்புகளாக யுடியூப் வழியாகப் பொதுவெளியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 5,32,788 பேர் பார்த்துள்ளனர் (17.03.2024 வரை). இப்பணியில் துணைநின்ற அனைவரையும் நன்றியுடன் போற்றி வணங்குகின்றேன்.

 

1.   தொல்காப்பியம் எழுத்ததிகாரம் அறிமுகம், பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார் உரை

https://www.youtube.com/watch?v=_mfnvLKEnd0&ab_channel=MuElangovan

 

2.   தொல்காப்பியம் சொல்லதிகாரம் அறிமுகம், பேராசிரியர் ந.இரா. சென்னியப்பனார் உரை

https://www.youtube.com/watch?v=IacWD6zV1ro&ab_channel=MuElangovan

 

3.   தொல்காப்பியம் பொருளதிகாரம், அறிமுகம், பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார்

https://www.youtube.com/watch?v=8AHc5oOcTuU&ab_channel=MuElangovan

 

4.   தொல்காப்பியச் சிறப்புகள், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை

https://www.youtube.com/watch?v=fURvAXvwjvc&ab_channel=MuElangovan

 

5.   தொல்காப்பியம் அறிமுகம், முனைவர் கோ. விசய வேணுகோபால் உரை

https://www.youtube.com/watch?v=t_rBh2QObuU&ab_channel=MuElangovan

 

6.   தொல்காப்பியச் சிறப்புகள், கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை, 2017

https://www.youtube.com/watch?v=G1kYzYMm2d4&ab_channel=MuElangovan

 

7.   தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு, புலவர் பொ. வேல்சாமி உரை, 2016, திசம்பர்

https://www.youtube.com/watch?v=7bLxtBFcces&ab_channel=MuElangovan

 

8.   தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை, 2016, திசம்பர்

https://www.youtube.com/watch?v=yqy0Jzi0fYU&ab_channel=MuElangovan

 

9.   தொல்காப்பியமும் உரையாசிரியர்களும், புலவர் பொ.வேல்சாமி, 2016

https://www.youtube.com/watch?v=UmNLv0XHZ70&ab_channel=MuElangovan

 

10.  தொல்காப்பியமும் வடமொழி மரபும், புலவர் பொ.வேல்சாமி, 2016

https://www.youtube.com/watch?v=vaVKOqYj34o&ab_channel=MuElangovan

 

11.  தமிழ் மரபில் தொல்காப்பியம் - புலவர் பொ.வேல்சாமி சிறப்புரை, 2016

https://www.youtube.com/watch?v=UAGis_WtXOs&ab_channel=MuElangovan

 

12.  தொல்கப்பியப் பதிப்புகள், புலவர் பொ.வேல்சாமி, 2016

https://www.youtube.com/watch?v=9VlAorsaSHQ&ab_channel=MuElangovan

 

13.  நானும் தமிழும், பொ. வேல்சாமி உரை, திசம்பர் 2016

https://www.youtube.com/watch?v=5mWrN5Z6ag0&ab_channel=MuElangovan

 

14.  தொல்காப்பியத்தின் உந்தி முதலா, முந்துவளி… விளக்கம்: மருத்துவர் மேரி கியூரி பால், 2016

https://www.youtube.com/watch?v=LU866aw5Ac8&ab_channel=MuElangovan

 

15.  தொல்காப்பியத்தில் இசை, முனைவர் இராச. கலைவாணி, 2016, ஏப்ரல்

https://www.youtube.com/watch?v=dBNaHIb-dc0&ab_channel=MuElangovan

 

16.  தொல்காப்பியம் மரபியல், இராச. குழந்தைவேலனார் உரை, 2016, மே

17.  https://www.youtube.com/watch?v=JYo33-PAPFw&ab_channel=MuElangovan

 

18.  தொல்காப்பியச் சிறப்புகள், முனைவர் க. இராமசாமி உரை, 2023

https://www.youtube.com/watch?v=iS_PvEPji5M&ab_channel=MuElangovan

 

19.  தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள், பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, 2022, சனவரி

https://www.youtube.com/watch?v=w4lOU5ufi-Y&ab_channel=MuElangovan

20.  வடமொழி ஒரு செம்மொழியா, பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, சனவரி, 2022

https://www.youtube.com/watch?v=MDzsUHPySSY&ab_channel=MuElangovan

 

21.  ஒப்பில் தொல்காப்பியம், பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, சனவரி 2022

https://www.youtube.com/watch?v=h4DFfYFlGb0&ab_channel=MuElangovan

 

22.  தொல்காப்பியம் குறித்த பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, நவம்பர் 2019

https://www.youtube.com/watch?v=MGpAAx7pXXg&ab_channel=MuElangovan

 

23.  தொல்காப்பியப் பெருமை - புலவர் வீ. செந்தில்நாயகம் உரை, நவம்பர் 2019

https://www.youtube.com/watch?v=DKvylgQc81Q&ab_channel=MuElangovan

 

24.  மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் - சிறப்புரை: முனைவர் எஸ். ஆரோக்கியநாதன், சூலை 2019

https://www.youtube.com/watch?v=lK2t6D0PutY&ab_channel=MuElangovan

 

25.  தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள்- பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் நேர்காணல், சனவரி, 2019

https://www.youtube.com/watch?v=MP3tvRD-C2I&ab_channel=MuElangovan

 

26.  தமிழக நாட்டுப்புறவியல்- சிறப்பு நேர்காணல்: பேராசிரியர் சரசுவதி வேணுகோபால், சனவரி 2019

https://www.youtube.com/watch?v=fRWj9N4a2HA&ab_channel=MuElangovan

 

27.  தொல்காப்பியம் அறிமுகம், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, பிப்ரவரி 2016

https://www.youtube.com/watch?v=ILuQW5LgefU&ab_channel=MuElangovan

 

28.  தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் – தமிழாகரர் தெ. முருகசாமி சிறப்புரை, ஏப்பிரல் 2017

https://www.youtube.com/watch?v=2nQTQrHxY2M&ab_channel=MuElangovan

 

29.  தொல்காப்பியம்- சேனாவரையர் உரைத்திறன், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, பிப்ரவரி, 2018

https://www.youtube.com/watch?v=dpV-68RgupI&ab_channel=MuElangovan

 

30.  சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள் - சிறப்புரை: பேராசிரியர் தெ. முருகசாமி, சூலை, 2019

https://www.youtube.com/watch?v=iCoH2s3RYj4&ab_channel=MuElangovan

 

31.  கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, திசம்பர், 2019

https://www.youtube.com/watch?v=JcTPa7znbZQ&ab_channel=MuElangovan

 

32.  இன்றைய நிலையில் ஞா. தேவநேயப் பாவாணரின் ஆய்வுகள் - பேராசிரியர் ப. மருதநாயகம் சிறப்புரை, நவம்பர் 2018

https://www.youtube.com/watch?v=6RRfqN0vvkY&ab_channel=MuElangovan

 

33.  தொல்காப்பியம் – செய்யுளியல் ஓர் அறிமுகம், முனைவர் தி. செல்வம் உரை, மார்ச்சு 2016

https://www.youtube.com/watch?v=Su-9eD-V9cQ&ab_channel=MuElangovan

 

34.  அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம், பேராசிரியர் ஆ. செல்லப்பெருமாள் சிறப்புரை, மார்ச்சு 2016

https://www.youtube.com/watch?v=-Wc5dqHPqD4&ab_channel=MuElangovan

 

35.  தனித்தமிழ் இயக்கம், புலவர் இரா. இளங்குமரனார் உரை, பிப்ரவரி, 2016

https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg&ab_channel=MuElangovan

 

36.  தமிழ் மரபுத் திருமணங்களை நடத்துவது எப்படி? – முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்புரை, திசம்பர் 2019

https://www.youtube.com/watch?v=bo09sOb3y3Q&ab_channel=MuElangovan

 

37.  தொல்காப்பியமும் வள்ளலாரும் - சிறப்புரை: தவத்திரு ஊரன் அடிகளார், பிப்ரவரி 2016

https://www.youtube.com/watch?v=Haum_OEZmk4&ab_channel=MuElangovan

 

38.  தொல்காப்பியம் உரியியல், சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களின் சிறப்புரை, மே 2016

https://www.youtube.com/watch?v=mYu49p7XDMg&ab_channel=MuElangovan

 

39.  பேராசிரியர் சுசுமு ஓனோ நினைவுரை - முனைவர் பொற்கோ, சூன் 2019

https://www.youtube.com/watch?v=hKXa6nfzJY0&ab_channel=MuElangovan

 

40.  தனித்தமிழ் இயக்கம், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா உரை, பிப்ரவரி 2016

https://www.youtube.com/watch?v=YqgRtO7MSL4&ab_channel=MuElangovan

41.  முதுபெரும் புலவர் இரா. கலியபெருமாள் நேர்காணல், திசம்பர் 2018

https://www.youtube.com/watch?v=te_8VLxJ1PU&ab_channel=MuElangovan

 

42.  இலங்கை எழுத்தாளர் தி. ஞானசேகரன் நேர்காணல் – காணொளி, திசம்பர் 2016

https://www.youtube.com/watch?v=LgCAYbJ6HQw&ab_channel=MuElangovan

 

43.  மேலப்பாதி திரு. வி. க. நூல் நிலையம் நூலகர் சு. பாலகிருட்டினன் ஐயா நேர்காணல், திசம்பர் 2016

https://www.youtube.com/watch?v=p_5aZbh5dCk&ab_channel=MuElangovan

 

44.  பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் - புலவர் நா. தியாகராசன் உரை, அக்தோபர், 2016

https://www.youtube.com/watch?v=jeKuGh4yh2s&ab_channel=MuElangovan

 

45.  மக்கள் கலைக்கழகத்தின் நாட்டுப்புறப் பாடல்கள்கோனேரி இராமசாமி உரையும் குழுவினரின் பாடல்களும், ஆகத்து 2017

https://www.youtube.com/watch?v=HyvtH_IpQTg&ab_channel=MuElangovan

 

46.  ரியூனியன், யோகக்கலை வல்லுநர், ஆச்சாரியா சுவாமி நீலமேகம், சனவரி 2024

https://www.youtube.com/watch?v=EzL56C-4jvM&ab_channel=MuElangovan

 

47.  தனித்தமிழ் மறவர் கடவூர் மணிமாறன் வாழ்வும் பணியும் – காணொலி, ஏப்பிரல் 2023

https://www.youtube.com/watch?v=TrBf-w4_7CI&ab_channel=MuElangovan

 

48.  தமிழிசைத் துறைக்கு ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு - முனைவர் மு.இளங்கோவன் கருத்துரை, சூலை 2020

https://www.youtube.com/watch?v=YUAtaVcjxhE&ab_channel=MuElangovan

 

49.  தமிழ் வளர்ச்சி பெற... - பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, பிப்ரவரி 2020

https://www.youtube.com/watch?v=UQpcUquexUo&ab_channel=MuElangovan

 

50.  வீரமாமுனிவரின் தேம்பாவணி – பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, பிப்ரவரி 2020

https://www.youtube.com/watch?v=BhB6l-FB7Hw&ab_channel=MuElangovan

 

51.  திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் தமிழ்ப் பணிகள் – தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் மற்றும் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளின் உரைகள் சனவரி, 2019

https://www.youtube.com/watch?v=vMpfIfMZ60Q&ab_channel=MuElangovan

 

52.  தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் 14 நூல்கள் வெளியீட்டு விழா காணொலி, சனவரி 2019

https://www.youtube.com/watch?v=4hqv-iImKUA&ab_channel=MuElangovan

 

53.  உலகத் தொல்காப்பிய மன்றம்- கங்கைகொண்டசோழபுரம் கிளை தொடக்க விழா!, நவம்பர் 2018

https://www.youtube.com/watch?v=Ii9nPAcwQ-k&ab_channel=MuElangovan

 

54.  நடவுப் பாடல்கள் – முனைவர் மு.இளங்கோவன் (பொதிகைத் தொலைக்காட்சி) https://www.youtube.com/watch?v=SCv07cc33Jc&ab_channel=MuElangovan

 

55.  பேராசிரியர் “செம்மொழி” க. இராமசாமி அவர்களின் வாழ்வும் பணிகளும் – நேர்காணல்

https://www.youtube.com/watch?v=16mz8TXIheM&ab_channel=MuElangovan

 

வெள்ளி, 26 ஜனவரி, 2024

வள்ளலார் வழித்தொண்டர் ஜெய. பாலகிருஷ்ணன்

 

ஜெய. பாலகிருஷ்ணன் 

பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் வாழ்ந்துவரும் ஜெய. பாலகிருஷ்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் பயின்றவர். கடலூரில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றவர். வள்ளலார் வழியில் தம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்டவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில்  2005 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் உலக வள்ளலார் மாநாட்டை நடத்தியவர். பிரான்சு – சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர். ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் நூலின் ஆசிரியர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர். 

பலவாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்குத் தவத்திரு. ஊரன் அடிகளார் அவர்கள் வடலூரிலிருந்து, புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுவை செயராம் உணவகத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு  வந்திருந்த அடிகளார் அவர்கள் பிரான்சு நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த திரு. ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களையும் அழைத்திருந்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களும் அடிகளாரின் அழைப்பின்பெயரில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி அடிகளார் மேடையில் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு தொடர்பு இல்லாமல் இருந்தோம். அண்மையில் புதுவை பால மோகன மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மீண்டும் பாலகிருஷ்ணன் ஐயாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும் உரையாடி மகிழும் வாய்ப்பு இல்லாமல் போனது. 

பிரான்சு நாட்டிலிருந்து அண்மையில் புதுவைக்கு வந்துள்ள திருவாளர்கள் ஜெயராமன் ஐயா, தணிகா ஐயா உள்ளிட்டோருடன் இன்றைய மாலை வேளையில் புதுவை நேரு வீதியில் உள்ள இந்தியன் குளம்பியகத்தில் தேநீர் சந்திப்பு ஒன்று நடந்தது. எங்கள் பேச்சின் ஊடாக ஜெய. பாலகிருஷ்ணன் ஐயாவுக்கு 27.01.2024 இல் நடைபெறும் விருது வழங்கும் விழா குறித்து உரையாடினோம். விருது பெறும் அறிஞர் குறித்து நன்மொழிகளை அரங்கில் பரிமாறிக்கொள்ள போதிய விவரங்களை வேண்டியபொழுது, வழக்கம்போல் அவரின் பன்முகத் திறனை ஒவ்வொன்றாக நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். வள்ளலார் நெறியில் வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களை இன்றைய(25.01.2024) தைப்பூச நாளில் நேரில் சந்தித்து உரையாடுவது சிறப்பு என்று கருதியும் அவர்தம் தமிழ்ப் பணிகளை அறிய வேண்டும் என்ற அவாவிலும், அவர் இல்லம் சென்றேன். அவர்தம் திருமண மண்டபத்தில் தைப்பூசம் சார்ந்த வள்ளலார் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அடுக்குமாடி இல்லத்தில் ஓய்விலிருந்த அவரிடம் உரையாடத் தொடங்கியபொழுது, அவரின் தமிழ் பயின்ற வரலாறும், தமிழ் இலக்கியப் பயிற்சியும் தெரியத்தொடங்கின. 

ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் வாழ்வு… 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் வடக்குத் தில்லைநாயகபுரம் என்னும் ஊரில் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் 05.12.1950 இல் பிறந்தவர். பெற்றோர் வீ. ஜெயராமலு, வச்சலா அம்மாள். உடன்பிறந்தோர் ஜெ. பக்கிரிசாமி (அண்ணன்), ஜெ. பங்காருசாமி(தம்பி). 

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் சிதம்பரத்தை அடுத்துள்ள சி. முட்லூர் அரசு பள்ளிகளில் பயின்றவர். புகுமுகக் கல்வி முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு: ஸ்ரீ வில்லிபாரதத்தில் பாத்திரப் படைப்புகள் என்பதாகும். இவர் தம் எம். ஓ. எல். (M.O.L) படிப்பில் ’கொங்கு மண்டல சதகம்’ குறித்து ஆராய்ந்து திட்டக்கட்டுரை வழங்கியவர். 


தங்கப் பதக்கம் பெறும் மாணவர் ஜெ. பாலகிருஷ்ணன்

வறுமையின் கோரப்பிடியில் இவரின் படிப்பு நடைபெற்றாலும் படிப்பிலும் உடலோம்புவதிலும் பெரும் விருப்பம் கொண்டிருந்தவர். தம் படிப்பில் முதன்மைக்காக  24. 06. 1972 இல்  நிறுவுநர் நாளில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழினைப் பாடமாக எடுத்துப் படித்தவர். இளங்கலைத் தமிழ் வகுப்பினை 1972-75 இல் படித்தவர். இவர் எம்.ஓ.எல். படித்தபொழுது இவருடன் 18 பேர் படித்தனர். இவரின் பேராசிரியர்களாக மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், அழ. பழநியப்பன், செ. வைத்தியலிங்கம், ஆறு. அழகப்பன், அ.ஆனந்த நடராசன், சு. சாமி ஐயா, ஆ.இராமசாமிப் பிள்ளை, சுப.இராமநாதன், வெ. செயராமன், ந.வீ. செயராமன், சோ.ந. கந்தசாமி, சிவ. திருநாவுக்கரசு, கதி. தியாகராசன் உள்ளிட்டோர் விளங்கினர். பேராசிரியர் க. வெள்ளைவாரணம் ஐயாவிடமும் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். 

எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்


எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்

எடைதூக்கும் போட்டியில் (Weightlifting) பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற போட்டிகளில் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, பல்கலைக்கழத்திற்குப் பெருமைசேர்த்தவர். புகுமுக வகுப்பில் இவருக்கு ஏற்பட்ட விளையாட்டு ஆர்வம் இவர் முதுகலை படிக்கும்பொழுது அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் வரை எடைதூக்கும் போட்டியாளராக அனுப்பிவைத்தது. 1978- முதல் 1979 வரை ஓராண்டு மட்டும் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டவர்.  1979 இல் கடலூர் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து, 1985 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தவர். இப்பள்ளி அரசு உதவிபெறும் பள்ளியாகும்.

09.02.1979 இல் புதுவையைச் சேர்ந்த மோகனா அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதல் மகன் செந்தில்; அனு, வாணி என்னும் இரு பெண் மக்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் பிரான்சில் வாழ்ந்து வருகின்றனர். புதுச்சேரி அல்லயன்சு பிரெஞ்சுப் பள்ளியில் பகுதி நேரமாகப் பிரெஞ்சு மொழி பயின்ற பாலகிருஷ்ணன் அவர்கள் 10.07.1985 இல், மூன்று ஆண்டு ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொண்டு, பிரான்சு நாட்டுக்குப் பயணமானார். 25.11.1985 முதல் 10.12.2010 வரை பாரிசில் உள்ள வீல் - இவரார் (Ville Evarard) என்ற மருத்துவமனையில் அலுவலகப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

பிரான்சு நாட்டில் வாழ்ந்த திரு. சிவசண்முகம் அவர்கள் வழியாக இராமலிங்க அடிகளாரின் படைப்புகளும் பணிகளும் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் ஆயின. வள்ளலாரின் ’பசித்தோர்க்கு உணவு’, ’கடவுளுக்கு உருவம் இல்லை’, ’இறைவன் ஒளி வடிவானவன்’ உள்ளிட்ட கொள்கைகளில் ஈர்ப்புண்ட பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் வழியில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். 2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17, 18 ஆகிய நாள்களில் பிரான்சில் நடைபெற்ற இராமலிங்கர் பணி மன்றத்தின் விழாவில் தலைமைப் பொறுப்பேற்று, உலக வள்ளலார் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர். பின்னர் பிரான்சு சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி, வள்ளலார் நெறிகளைப் பரப்பி வருபவர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூத்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றறிந்த ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் புறநானூற்றுப் பாடலடியை நூல் தலைப்பாக்கிப் புற நானூற்றுச் செய்திகளின் அடிப்படையில் அரிய நூலொன்றைப் படைத்துள்ளார்.  புறநானூற்றுச் செய்திகளை எளிய மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் அரிய படைப்பாக இந்த நூல் விளங்குகின்றது. தவத்திரு ஊரன் அடிகளார் அணிந்துரையுடன் வெளிவந்துள்ள இந்த நூல் 2017 ஆம் ஆண்டில் 126 பக்கத்தில் வெளிவந்துள்ளது. 



புதுச்சேரியில் பால மோகன மகால் உருவாக்கியும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கியும், புதுவை - திண்டிவனம் சாலையில் முதியோர் இல்லம் உருவாக்கியும் மக்கள் பணியில் மனம் செலுத்தும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் நெறியை வையமெங்கும் பரப்பும் பல்வேறு திட்டங்களை மனத்துள்கொண்டுள்ளார். 

வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடிய, கருணை நெஞ்சத்தாரைத் தம் முன்னோடியாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் ஆய்வுப்பணிகளும் எழுத்துப்பணிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து, தமிழுக்கு ஆக்கம் நல்கும் என்று நம்புவோமாக!



வெள்ளி, 22 டிசம்பர், 2023

தருமை ஆதீனப் புலவர் வித்துவான் மு. வைத்தியநாதன்…

வித்துவான் மு. வைத்தியநாதன் 

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள உருமு தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், உருமு தனலெட்சுமி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றித் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் பெருந்தொண்டாற்றிவரும்  வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் எண்பத்தைந்தாம் அகவையில் தற்பொழுது திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்து வருகின்றார். தமிழிலும் சைவத்திலும் பெரும்புலமை மிக்க அறிஞரான இவர்தம் திருவெம்பாவை உரையைத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் இவரின் இல்லத்துக்கு வந்து பதிவுசெய்து, மார்கழி மாத வைகறைப்பொழுதில் ஒலிபரப்பி வருகின்றமை இவர்தம் அறிவுப் பெருமைக்குச் சான்றாகும். 

 அரியலூர் மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியை வரையறுத்து ஓடும் வடவாற்றங்கரையில் உள்ள ஊர் பிள்ளைப்பாளையம் ஆகும். பொல்லாப்பாளையம் என்று மக்கள் வழங்குவர். இவ்வூரில் வாழ்ந்த “மணியம்” பி. . முத்துக்குமரப் பிள்ளை, திருநாவுக்கரசி அம்மை ஆகியோரின் மகனாக 1940 ஆம் ஆண்டில் வித்துவான் மு. வைத்தியநாதன் பிறந்தவர். இவர்தம் குடும்பத்தினர் யாவரும் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்கள். 

தம் பிறந்த ஊரில் இடைநிலைக் கல்வி வரை பயின்று, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான்காண்டுகள் (1956 முதல் 1960 வரை) பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வெழுதி, மாநில அளவில் முதல் மாணவராக வெற்றிபெற்றவர். இவரின் ஒருசாலை மாணவராக விளங்கியவர் முனைவர் பொற்கோ ஆவார். மு. வைத்தியநாதன் அவர்களுக்குச் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியர்களாக வாய்த்தவர்கள் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய அறிஞர்களான  கே. எம். வேங்கடராமையா, இருமொழிப் புலவர் மு. சுந்தரேசம் பிள்ளை, மு. கோவிந்தராசனார், தி.வே.கோபாலையர்,  தா. ம. வெள்ளைவாரணம், கு. சுந்தரமூர்த்தி, நகராமலை இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆவர். 

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெரும்புலவர் சி. புன்னைவனநாத முதலியார் அவர்களைக் கொண்டு நடத்திய புலவர் பட்டத் தேர்வெழுதி, மு. வைத்தியநாதன் முதல் மாணவராகத் தேறியவர். கல்வியியல், மொழியியல், நூலகவியல் தேர்வுகளை எழுதிச் சான்றிதழ்களைப் பெற்றவர். பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் தமையனார் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் பரிந்துரையின்படி, திருச்சிராப்பள்ளியில் புகழுடன் விளங்கிய தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். பின்பு கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றி, 39 ஆண்டுகள் தமிழ்த்தொண்டாற்றி 2000 ஆம் ஆண்டில் பணிநிறைவு பெற்றவர். பணியின் நிமித்தம் தம் இருபதாம் அகவையில் திருச்சிக்கு வருகைபுரிந்த மு. வைத்தியநாதன் அவர்கள் கடந்த அறுபதாண்டுகளாகத் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளையும், சமய இலக்கிய நிகழ்வுகளையும் அறிந்த பெருமைக்குரியவராக உள்ளார்.

 


தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டக் குழு, தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தும் பாட நூல் ஆசிரியராக இருந்தும் தாம் ஏற்றுக்கொண்ட பணிகளைத்  திறம்படச் செய்துள்ளவர். பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைத்த புத்தொளிப் பயிற்சிகளில்  ஆசிரியராக இருந்து கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் பயிற்றுவித்துள்ளார். 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்கு 1967 இல் திருமணம் நடைபெற்றது. இவரின் துணைவியார் பெயர் சந்திரா என்ற சந்திரகுமாரி ஆவார். இவர்களுக்கு வள்ளி என்ற ஒரே மகள் மக்கள் செல்வமாக வாய்த்தார். திருமதி வள்ளி அவர்கள் ஆத்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்களின் சமயப்பணி 

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபையின் செயலராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர். இந்தச் சபை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களால் திறந்துவைத்த பெருமைக்குரியது. இச்சபையின் சார்பில் வாரந்தோறும் முப்புராணங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திர நூல்கள், பிரபந்தங்கள், திருப்புகழ், தாயுமனவர் பாடல்கள் குறித்த விரிவுரைகள் நடைபெறுவதற்குப் பெருந்துணைபுரிந்தவர். 1985 ஆம் ஆண்டில் அந்தச் சபையின் நூற்றாண்டு விழாவை முன்னின்று நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 

திருச்சிராப்பள்ளியில் திருமுறை மன்றம் அமைத்து அம்மன்றத்தின் வழியாக அன்பர்களின் இல்லங்களில் திருமுறை முற்றோதல், உரை விளக்கங்கள் நடைபெற உதவியவர். காலை 9 மணிக்குத் தொடங்கும் சிறப்புரை மாலை 5 மணி வரை நடைபெறும். அவ்வகையில் பன்னிரண்டரை ஆண்டுகள் சிறப்புரைகள் நடைபெற்று 18286 பாடல்களுக்கும் விளக்கம் சொன்ன பெருமை இவரைச் சாரும். 

மலைக்கோட்டையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு உரிமையுடைய  மௌனமடம் உள்ளது. அதில் இயங்கிய சைவசித்தாந்த மாலை நேரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி பலர் சைவ சித்தாந்த கலாநிதிகளாக மலர்வதற்கும் பலர் சைவசித்தாந்த புலவர்களாக வளர்வதற்கும் துணைநின்றவர். இவரின் வகுப்புகளில் கற்றுச், சமயப் பெருமை உணர்ந்த மாணவர்கள் சிலர் பின்னாளில் துறவிகளாகத் திருமடங்களில் இணைந்துள்ளனர். 

திரிசிரபுரச் சைவசித்தாந்த சபையில் மாதந்தோறும் நான்காம் ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்குறள் விரிவுரை, ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் அவ்வாறு விரிவுரை நிகழ்த்தியுள்ளார். அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட  தருமை ஆதீனம் இருபத்தாறாம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்குத் திருக்குறள் செல்வர் என்னும் விருதளித்தும், ஒரு பவுன் தங்கக் காசு அளித்தும், பொன்னாடை அணிவித்தும் பெருமை செய்தார்கள். 

திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள வாகீச பக்த ஜனசபை எண்பது ஆண்டுகள் பழமையுடைய அமைப்பாகும் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் தொடர் விரிவுரைகளில் கலந்துகொண்டு திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், முப்புராணங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள், திருப்புகழ் பற்றிய தொடர் விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். 

தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, மதுரை பன்னிரு திருமுறை மன்றம், கோவை பன்னிரு திருமுறை ஆய்வு மன்றம், மயிலை திருமுறை மன்றம், மயிலாடுதுறை கோபல் அறக்கட்டளை, சென்னை அரனருள், சென்னை சைவ சித்தாந்த பெருமன்றம், இலால்குடி அறநெறிக் கழகம், சென்னை இராமலிங்கர் பணிமன்றம் உள்ளிட்ட அமைப்பினர் நடத்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கற்றோர் வியக்குமாறு கருத்துரை வழங்கிய பெருமைக்குரியவர். 

தருமபுர ஆதீனம் நடத்திய அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாடு மற்றும்  பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளில் இணைப்புரை வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு. 

தருமையாதீனம் இருபத்தாறாவது குருமகா சந்நிதானம் அவர்கள் தருமையாதீனப் புலவர் என்னும் விருதினை வழங்கியுள்ளார்கள். மேலும், பொற்கிழியும் பொன்னாடையும் அணிவித்துப் பாராட்டியுள்ளார்கள். திருப்பனந்தாள் காசித் திருமடத்து அதிபர் கயிலை மாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் சைவத் தமிழ்மணி  என்னும் விருதும் பொற்பதக்கமும் அளித்துப் போற்றியுள்ளார்கள் காஞ்சிபுரம் காமகோடி பீடம் சார்பிலும் இவருக்குச் சித்தாந்த வித்தகர் என்ற விருதும் பணமுடிப்பும் வழங்கப்பெற்றுள்ளது. திருவரங்கத்தில் உள்ள இராசவேலு- செண்பகத் தமிழரங்கின் சார்பில் தமிழ் மாமணி விருதளித்துப் பாராட்டப்பெற்றவர். 

பதிப்புப் பணி 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். திருவையாற்றுப் புராணம், திருகற்குடிமாமலை மாலை, சிராமலையந்தாதி, சிராமலைக் கோவை உள்ளிட்ட பல நூல்களை ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பித்து அச்சு நூலாகக் கொண்டுவந்தவர். 

மலர்ப் பதிப்பாசிரியர் 

திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபை நூற்றாண்டு விழா மலர், துணைவேந்தர் தி. மூ. நாராயணசாமிப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி இராவ்சாகிப் எல். என். பரமசிவம் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா மலர், உறையூர் வாகீச பக்த ஜனசபை வைரவிழா மலர் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் திருக்கற்குடித் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர் உள்ளிட்ட சிறப்பு மலர்களை வெளியிட்டு, நிகழ்வுகளை ஆவணங்களாகப் பதிவுசெய்த பெருமைக்குரியவர். 

திருமுறை விளக்க வகுப்பு 

திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல பயிற்சி மையங்களில் திருமுறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் திருச்சிராப்பள்ளி கைலாசபுரம் கிளைப் பயிற்சி வகுப்பில் பேராசிரியராக இருந்து கடந்த ஏழாண்டுகளாகத் திருமுறை விளக்கம் செய்து வருகின்றார்கள். 


வானொலி உரைகள் 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் திருச்சிராப்பள்ளி வானொலி வழியாகத் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சைவ சமயச் சிறப்பு குறித்தும் மிகுதியான சிறப்புரைகள் வழங்கியுள்ளார். காலையில் சிந்தனை உரைகளாக அமையும் இவர் உரை, இரவுப் பொழுதில் நால்வர் பதிக அற்புதங்களாகவும், பன்னிரு திருமுறைகளில் தமிழ்க் கலைகளாகவும் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பக்திப் பொழிவுகளாகவும் மக்களின் நெஞ்சங்களை மகிழ்வித்துள்ளன.35 நிகழ்ச்சிகள் சமய இலக்கியம் குறித்தும் 18 உரைகள் சங்க இலக்கியம் குறித்தும் 10 உரைகள் திருமுருகாற்றுப்படை குறித்தும் அமைந்து, சற்றொப்ப 50 க்கும் மேற்பட்ட அரைமணி நேரச் சிறப்புரைகளைத் திருச்சிராப்பள்ளி வானொலி ஒலிபரப்பியுள்ளது. 

ஊரன் அடிகளார் திருவருட்பாவினை ஆறு திருமுறைகளாகத் தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிட்டார்கள். மேலும் தருமை ஆதீனம் பன்னிரு திருமுறைகளை 20,000 பக்கங்களில் வெளியிட்டனர். இவற்றையெல்லாம் மெய்ப்புப் பார்த்து, நூல் செப்பமாக வெளிவருவதற்குத் துணைநின்ற பெருமைக்குரியவர் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள். 

தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படக் கற்ற பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் வாழ்நாளெல்லாம் அதன் சுவைகளையும் சிறப்புகளையும் பல வடிவங்களில் மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசேர்த்த மாமனிதர் என்றும் மேன்மைகொள் சைவநெறியைப் பரப்புவதில் ஆர்வமுடன் செயல்பட்டவர் என்றும் இவரைப் போற்றலாம்.