நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
விழுப்புரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழுப்புரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 பிப்ரவரி, 2016

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்



விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 27.02.2016 காரி(சனி)க் கிழமை நடைபெற்ற இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்னும் தலைப்பில் அமைந்த மாநில அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கல்லூரியின் தாளார் உயர்திரு ஏ. சாமிக்கண்ணு அவர்களும், கல்லூரி இயக்குநர் பேராசிரியர் கஸ்தூரிபாய் தனசேகரன் அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மு. மங்கையர்க்கரசி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

என் உரையை முழுவதும் செவிமடுத்த கல்லூரித் தாளாளர் அவர்கள் ஒரு விருப்பம் தெரிவித்தார். நான் மீண்டும் ஒருமுறை அவர்களின் கல்லூரிக்கு வந்து தமிழக நாட்டுப்புறப் பாடல்களைக் கல்லூரி மாணவிகள் அனைவரும் கேட்கும் வகையில் உரையாற்ற வேண்டும் என்பதே அந்த விருப்பம். சற்றொப்ப மூவாயிரம் மாணவிகள் பயிலும் கல்லூரியைப் போற்றிப் புரக்கும் தமிழ்ப்பற்று நிறைந்த கல்லூரியின் தாளாளர் திரு. ஏ. சாமிக்கண்ணு அவர்கள்  இந்நாடு முன்னேற தாய்மொழிவழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆற்றிய உரையைக் கேட்டு நான் வியந்தேன். தமிழ் உணர்வு தழைத்த தாளாளர் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.


வாய்ப்பு நல்கிய விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியினருக்கு நன்றி.





புதன், 8 ஆகஸ்ட், 2012

மாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூலகங்கள் அறிமுகம்


விழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்

விழுப்புரம் மாவட்ட மைய நூலகர் திரு.அசோகன் அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் மாவட்ட மைய நூலகமும், கல்கத்தா இராசாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையும் இணைந்து மாவட்ட அளவில் நூலகர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி வழங்கும் நிகழ்வைக் கடந்த 01.08.2012 பிற்பகல் நடத்தியது. அதில் நான் கலந்துகொண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சற்றொப்ப 50 கிளை நூலகர்களுக்குத் தமிழ் இணைய அறிமுகம், தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்தை இரண்டரை மணி நேரம் வழங்கினேன்.

அதுபோல் 08.08.2012 பிற்பகல் கடலூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளை நூலகர்கள் சற்றொப்ப ஐம்பதின்மருக்குப் பயிற்சி வழங்கினேன். இவர்களுக்கும் தமிழ்த்தட்டச்சு, மின்னூல்கள், நூலகங்கள், மின்பதிப்புகள் பற்றி விளக்கினேன். தமிழக அரசு கணினி, இணைய வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளையும் நினைவுகூர்ந்தேன். அனைவரும் கணினி, இணைய நூலகம், மின்னிதழ்கள் குறித்து ஆர்வமுடன் தெரிந்துகொண்டனர். கடலூர் மாவட்ட நூலகர் திரு.சி.சின்னத்தம்பி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


திரு.அசோகன்(விழுப்புரம் மாவட்ட நூலகர்), திரு.சின்னத்தம்பி(கடலூர் மாவட்ட நூலகர்),மு.இ,


கடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்


கடலூர் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்




விழுப்புரம் மாவட்ட நூலகர்கள்-ஒரு பகுதியினர்