நாள் 13.10.2008 திங்கள்கிழமை,
நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை
இடம்: சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரி, மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், இணையத் துறையில் தமிழ்சார்ந்து நடைபெற்றுள்ள முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையிலும் தமிழ் இணையப் பயிலரங்கு மோகனூர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும், பெங்களூர் தமிழா.காம் நிறுவன உரிமையாளர் திரு.சு. முகுந்தராசு அவர்களும் வலைத்தள வடிவமைப்பாளர்கள் பொறியாளர் வே. முருகையன், பொறியாளர் வெ.யுவராசன் அவர்களும் மாணவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்து பயிற்சியளிக்க உள்ளனர். தமிழ் இணைய ஆர்வலர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இப் பயிலரங்கில் தமிழ்த் தட்டச்சு முறைகள். தமிழ் 99 விசைப்பலகை, ஒருங்குகுறி, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல், தமிழில் உரையாடல், வலைப்பூ உருவாக்கம், தமிழில் உள்ள மென்பொருள்கள், தமிழ்மணம் பணிகள், தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரைத்திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள், தமிழ் இணைய வானொலி, தமிழ் இணையத் தொலைக்காட்சிகள், மின்நூலகங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிப் பயிற்றுவிக்க உள்ளனர்.
பயிலரங்கத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.சு.பழனியாண்டி அவர்கள் செய்ய உள்ளார்கள்.