நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#பத்மஸ்ரீ விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#பத்மஸ்ரீ விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜனவரி, 2017

பழங்குடி இன நாட்டுப்புறக் கலைஞர் சுக்ரி பொம்ம கௌடாவுக்குப் பத்மஸ்ரீ விருது




கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ஹலக்கி ஒக்கலிக எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் சுக்ரி பொம்ம கௌடாவுக்கு இந்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்க உள்ளது. இவரின் நாட்டுப்புறக் கலைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். சுக்ரி பொம்ம கௌடா வழியாகப் பழந்தமிழகத்தின் கூத்து மரபுகள், இசை மரபுகளை அறிய வாய்ப்பு உள்ளது. மூத்த கலைஞருக்கு என் பாராட்டுகளும், வணக்கமும்.