கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ஹலக்கி ஒக்கலிக எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் சுக்ரி பொம்ம கௌடாவுக்கு இந்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்க உள்ளது. இவரின் நாட்டுப்புறக் கலைத்துறைப்
பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். சுக்ரி பொம்ம கௌடா வழியாகப் பழந்தமிழகத்தின் கூத்து மரபுகள், இசை
மரபுகளை அறிய வாய்ப்பு உள்ளது. மூத்த கலைஞருக்கு என் பாராட்டுகளும், வணக்கமும்.
