நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 மார்ச், 2024

தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு!

 


 முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிப்பு. அருகில் முனைவர் நெய்தல்நாடன், பாவலர் தமிழ்நெஞ்சன் உள்ளிட்ட தமிழன்பர்கள்.

 புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் தமிழ் இலக்கணத் தந்தை ஒல்காப் புகழமைந்த தொல்காப்பியனாரின் திருவுருவச் சிலைக்கு முழுமதி நாள் மலர் வணக்கம் செய்யும் பத்தாம் திங்கள் நிகழ்வு 25.03.2024(திங்கள்) காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது

 புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவுநர் கலைமாமணி முனைவர் நெய்தல்நாடன் தலைமையில்  நடைபெற்றது.


  புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறை  இணைப்பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன்  தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் வணக்கம் செலுத்தியதுடன், தொல்காப்பியச்  சிறப்புரைக்கும் உரை  நிகழ்த்தினார்.  

 நிகழ்வுக்கு வந்திருந்தவர்களைக்  கவிஞாயிறு  முருகு. மணி வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் நன்றி கூறினார். காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் பாவலர் வேணு. ஞானமூர்த்தி, புதுவைத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் . திருநாவுக்கரசு, .ரா.பூபதி அறக்கட்டளைச் செயலர் செந்தமிழ்த்தொண்டர் சவரி. பத்மநாபன், ஆன்மிகச் செம்மல் . முத்துஐயாசாமி, கவிச்சுடர் கே.சி.செயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: