நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 5 செப்டம்பர், 2011

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தாள் விழா


படத்தைத் திறந்துவைக்கும் முனைவர் ழான் லூய்க் செவ்வியார்

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள் விழா, படத்திறப்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள இலப்போர்த்து வீதியில் அமைந்துள்ள இரெவே சொசியால் அரங்கில் 05.09.2011 மாலை 6.30 மணியிலிருந்து எட்டு மணி வரை நடைபெற்றது.

பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தலைமை தாங்கினார். பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் ழான் லூய்க் செவ்வியார் அவர்கள் பெருமழைப்புலவரின் படத்தைத் திறந்துவைத்தார்.

திருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்கள் பெருமழைப்புலவரின் வாழ்க்கை, கல்வியார்வம், உரைச்சிறப்பு, சைவ சிந்தாந்தக் கழகத் தொடர்பு, உள்ளிட்ட பல செய்திகளை ஒரு மணி நேரம் நிரல்பட எடுத்துரைத்தார்.

புலவர் இ.திருநாவலன், புவர் நாகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற, முனைவர் ஆ.மணி நன்றியுரையாற்றினார். தமிழாசிரியர் மூ. பூங்குன்றன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். புதுவைத் தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

மேலைப்பெருமழையிலிருந்து புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் மகன் சோ.பசுபதி அவர்களும், திரு.சிவபுண்ணியம் அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்தனர்.


முனைவர் கோ.விசய வேணுகோபால்(தலைமையுரை)


முனைவர் ழான் லூய்க் செவ்வியார்


முனைவர் இரா.இளங்குமரனார் உரை


அறிஞர்கள் சிறப்பிக்கப்படுதல்


கல்விச்செம்மல் முத்து, மு.இளங்கோவன்


விழாவில் கலந்துகொண்ட அறிஞர்கள்


புலவர் இரா.இளங்குமரனாருடன், சோ.பசுபதி(பெருமழைப்புலவரின் தலைமகன்)


முனைவர் ஆ.மணி, புலவர் இரா.இளங்குமரனார், மூ.பூங்குன்றன், முத்து ஐயா

புலவர் பற்றி மேலும் அறிய...

கருத்துகள் இல்லை: