நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 6 அக்டோபர், 2010

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 'தமிழ் இணையம்' அறிமுகவிழா சிறப்புடன் நடைபெற உள்ளது. 07.10.2010(வியாழன்) காலை பத்துமணிக்குத் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இசுலாமியக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா பாஷா அவர்கள் தலைமையில் விழா நடைபெறுகிறது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றுகின்றார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றித் தமிழ் இணையத்தின் வளர்ச்சி,வாய்ப்புகளைச் செய்முறை வழியாக மாணவர்களுக்கு விளக்க உள்ளார்.இதில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,புகழ்பெற்ற இணையதளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம் யாவும் அடங்கும்.

முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றுவார்.
இணையத் தமிழின்பம் பருக இசுலாமியக்கல்லூரியின் தமிழ்த்துறையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

தொடர்புக்கு: பேராசிரியர் ப.சிவராஜி 90958 31291

கருத்துகள் இல்லை: