நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஆகஸ்ட், 2010

மொழிஞாயிறு பாவாணரின் அரிய கட்டுரை ஒன்று கிடைத்தது...

இரண்டு நாளுக்கு முன் புதுச்சேரி-பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஔவை.சு.துரைசாமி பிள்ளை அவர்களின் மத்தவிலாச பிரகசனம் என்ற கட்டுரையைத் தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எதிர்பாராத வகையில் பாவாணரின் "மொழித்திறத்தின் முட்டறுப்பது மொழி நூலே "என்ற கட்டுரை கிடைத்தது.எட்டுப்பக்க அளவுள்ள கட்டுரை.1955 இல் உருவான கட்டுரை.தமிழ்மண் பதிப்பக வெளியீடுகளில் இக்கட்டுரை வெளிவந்துள்ளதா என இனிதான் பார்க்கவேண்டும். வந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்"

என்னும் பழைய வெண்பாவை எடுத்துக்காட்டித் தொடங்கும் கட்டுரை மொழித்திறத்தின் முட்டறுக்கத் துணைபுரியும் நூல்கள், அகராதி,இலக்கணம்,சொற்பிறப்பியல் என்னும் சொல்லியல்,மொழிநூல் என நால்வகை என்று வகைப்படுத்துகிறது.

இதுபோதுள்ள தமிழிலக்கண நூல்களிலுள்ள வழுக்களிற் பல தொல்காப்பியத்தினின்றே தொடர்ந்து வருகின்றன.அவை பல திறத்தன.அவையாவன:

1.எழுத்துநிலை
2.புணர்மொழிச்சொற்கள்
3.புணர்ச்சித்திரிபு
4.பகுசொல்லுறுப்புப் பிரிப்பு
5.தொகைச்சொல்லியல்பு
6.சொல்வரலாறு
7.சொல்வகை

என்னும் குறுந்தலைப்புகளில் பாவாணர் அரிய விளக்கங்களைத் தந்துள்ளார்.
(நேரம் கிடைக்கும்பொழுது முழுக்கட்டுரையையும் வெளியிடுவேன்)

1 கருத்து:

Unknown சொன்னது…

பொருளுர்ந்து

Tamil font illai. MeluLLathu sariya Tavara? "NA" serkkavum.
Thanks for good quote.
RR