நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 27 மார்ச், 2009

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தளங்கள் குறித்த என் சிறப்புரை...

கோயமுத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் இளம் முனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29.03.2009) காலை 10.30 மணிக்குத் தமிழ் இணையத்தளங்களும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அழைத்துள்ளனர்.

என் உரையில் கணினி,இணையம் தமிழ் ஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உதவும் என்ற அடிப்படையில் செய்திகளை எதிர்பார்க்கின்றனர்.கணினி வழியாகத் தமிழ் மொழியைக் கற்கும் நெறிகள்-கணினித்தமிழை ஆய்வுப்பொருளாகக் கொண்ட ஆய்வுகள்-தமிழ்க் கணினியை மையமிட்ட ஆய்வுகள்/ நடைபெற்றுக்கொண்டுள்ள ஆய்வுகள் அறிமுகம்- தமிழ் இலக்கியத்தில் புதிய ஆய்வியல் அணுகுமுறைகள்-ஆய்வுப்போக்குகள்-தமிழ் இலக்கியத்தில் கணினி மையமிட்ட எதிர்கால ஆய்வுக்களங்கள்-தமிழ் இலக்கிய ஆய்வுகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்-தமிழிலக்கிய ஆய்வுக்களங்களும் பிற இலக்கியங்களும் குறித்த கருத்தாக்கங்கள்-புத்தாக்கச் சிந்தனைகள் எனபன போன்ற செய்திகளை உள்ளடக்கியும் பேச உள்ளேன்.

கருத்தரங்கிற்கு நண்பர் காசி அவர்களும்(தமிழ்மணம்) எனக்குத் தெரிந்த தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரும் வருகைதர உள்ளனர்.

கருத்தரங்கில் கலந்துகொள்ள விவரம் வேண்டுவோர் பேராசிரியர் முருகேசன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.
செல்பேசி எண் : 9443821419

2 கருத்துகள்:

rathinapugazhendi சொன்னது…

கருத்தரங்கு சிறப்புற வாழ்த்துகள்

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

கோவை கருத்தரங்கம் சிறப்பாய் நிகழ வாழ்த்துகிறேன்