நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 16 மார்ச், 2009

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு முதல் அமர்வு நிறைவு...

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் 16.03.2009 திங்கள் காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் உரிய நேரத்தில் கலந்துகொண்டேன்.

மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.யுவராசு அவர்கள் தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. மாவட்ட நூலகர் திரு.இரா.வேல்முருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட நூலகர்களும்,இணைய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த அனைத்துச் செய்திகளும் காட்சி விளக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டன.

பயிலரங்கச் செய்திகள் உடனுக்குடன் உள்ளூர்த் தொலைக்காட்சிகள், செய்தி ஏடுகள் வழியாக நாமக்கல் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.பகல் ஒரு மணி வரை பயிலரங்கு நடந்தது.
உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்துள்ளனர்.

இரண்டு மணிக்கு மின்வடிவில் வெளிவரும் இதழ்கள் அறிமுகம் செய்யும் காட்சி விளக்கமும், வலைப்பூ உருவாக்கம் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை: