நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 23 மார்ச், 2008

புதுச்சேரியில் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. 5

 புதுச்சேரித் தனித்தமிழ் இலக்கியக்கழகமும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவை நடத்தின. 23.03.2008 காலை 10.30 மணிக்குப் புதுச்சேரி அன்னை மீட்பர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சீனு.அரிமாப்பாண்டியன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

 புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் 'பாவாணர் ஆய்வில் சொல்வளச் சுரங்கம்' என்னும் தலைப்பில் அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார். பாவாணரின் சொலாய்வுச் சிறப்புகளை இரண்டு மணி நேரம் எடுத்துரைத்தார். அவையோர் மகிழ்ந்தனர். தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரியில் வாழும் அறிஞர் பெருமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: