நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

புதுச்சேரி தமிழ்வலைப்பதிவர் பட்டறை, திசம்பர் 9

புதுச்சேரியில் தமிழ்வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை வரும் திசம்பர் 9 ஆம் நாள் நடைபெற உள்ளது.புதுச்சேரி நகரத்தில் சற்குரு உணவகத்தில் அமைந்துள்ள கருத்தரங்க அறையில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிவரை நிகழ்ச்சி நடைபெறும்.

காலையிலும் பிற்பகலிலும் இணையம்,வலைப்பதிவு,மின்னஞ்சல் அனுப்புவது,ஒருங்குறி எழுத்து,அதனைநிறுவுவது,புதிய இணையப்பக்கம் உருவாக்குவது முதலானபொருள்களில் பயிற்சியாளர்களின் அறிமுக உரையும்,செயல் விளக்கங்களும் இடம்பெறும்.

மாலை 6 மணிக்குத் தொடங்கும் மாலைஅமர்வு பொதுஅமர்வாகத் தொடங்கிப் புதுவையின் தமிழ்அறிஞர்கள்,கணிப்பொறி ஆர்வலர்களின் உரையோடு நடைபெறும்.புதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்களும்,பிற அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்புமலர் வெளியிடப்படுகின்றது.பயன்பாட்டுக் குறுவட்டு ஒன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கல்லூரி,பல்கலைக்கழக மாணவர்கள் இப்பட்டறையில் கலந்துகொள்ள உள்ளனர்.

கணிப்பொறி,இணையம்,வலைப்பதிவுத் துறையில் உள்ளவர்களுடன் இணைந்து இப்பணியை வெற்றியாக நிறைவேற்றப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் அன்புடன் அழைக்கிறது.

கட்டுரை வழங்குவோர்,பயிற்சியளிக்க முன்வருவோர்,பொருளுதவி, விளம்பரம் வழங்க விரும்புவோர்,பங்குபெற விரும்புவோர் திரு.இராச.சுகுமாரன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கைப்பேசி : +9443105825
மின்னஞ்சல் :rajasugumaran@gmail.com

மு.இளங்கோவன்,புதுச்சேரி
muelangovan@gmail.com

கருத்துகள் இல்லை: