எழுத்தாளர் முருகேசப்பாண்டியன் அவர்களிடம் விருதுபெறல்
சென்னை தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு. ஒவ்வொரு மாதமும் குறும்படம் எடுக்கும் கலைஞர்கள் ஒன்றுகூடி சிறந்த குறும்படங்களை வெளியிட்டும் விவாதித்தும் குறும்படங்கள் தரமானவையாக வெளிவர இந்த அமைப்பினர் பாடுபடுகின்றனர்.
இந்த அமைப்பு சிறந்த வலைப்பதிவர்களைத் தேர்தெடுத்து விருது வழங்கி வருவதையும் தம் பணியாகச் செய்து வருகின்றது.அந்த வகையில் என் வலைப்பதிவுச் செய்திகளை உற்று நோக்கிய இந்த அமைப்பு என் பதிவுச்செய்திகள் அடிப்படையிலும், தொடர்ந்த என் தமிழ் இணையப் பணியை ஊக்குவிக்கும் வகையிலும் நேற்று(09.05.2009) சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை வழங்கியது.
எழுத்தாளர் ந.முருகேசப்பாண்டியன் அவர்கள் விருது வழங்கினார். கலைத்துறை சார்ந்த பல்வேறு இயக்குநர்கள் நடிகர்கள் கலந்துகொண்டனர். என் நண்பர்கள் நடிகர் தமிழியலன், இயக்குநர் அ.சந்திரசேகரன், அருண் உள்ளிட்டவர்கள் வந்திருந்தமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்
அரங்கில் தமிழ் ஸ்டுடியோ
விருது வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தும் பதிவுகள் குறித்தும் மு.இ.உரை
மு.இ, முருகேசப்பாண்டியன், அருண், தமிழியலன், அ.சந்திரசேகர்