நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 28 ஜூலை, 2014

ஒரு சாமானியனின் சாதனை நூல் அறிமுக விழா, மாணவர்களுக்கு அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியளிப்பு விழா அழைப்பிதழ்


கொங்கு மண்டலத்தில் பிறந்து குவைத்தில் வாழ்ந்துவரும் திரு. கு.இளங்கோவன் அவர்கள் தம் உழைப்பால் ஈட்டிய நிதியின் ஒருகூறைப் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு அரவணைப்பு என்னும் தொண்டு நிறுவனத்தின் வழி, தொடர்ந்து உதவி வருகின்றார். அன்னார் தம் கடும் உழைப்பில் அமைந்த வாழ்க்கையை ஒரு "சாமானியனின் சாதனை" என்னும் தலைப்பில் தன்வரலாறாக எழுதியுள்ளார். இந்த நூலை அறிமுகப்படுத்தும் அறிமுக விழாவும் மாணவர்களுக்கு அரவணைப்பு நிறுவனம் வழங்கும் நிதியளிப்பு விழாவும் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளன. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 31. 07. 2014, நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), புதுச்சேரி

அறுமுகனம், தண்ணுமை முழக்கம்:
கலைமாமணி சு.கோபக்குமார் அவர்கள் 

வரவேற்புரை:  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

       தலைமையும் நூல்வெளியீடும்:
       மாண்புமிகு வ. சபாபதி () கோதண்டராமன் அவர்கள்
பேரவைத் தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை

நிதியுதவி வழங்குதல்: மாண்புமிகு பெ.இராஜவேலு அவர்கள்
நலத்துறை, சுற்றுலாத்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு

      நூல் அறிமுகம்: முனைவர் ஆ.மணி அவர்கள்

ஏற்புரை: திரு. கு.இளங்கோவன் அவர்கள், 
அரவணைப்புத் தொண்டு நிறுவனம், கோவை

நன்றியுரை: திரு. பெ. பூபதி அவர்கள்

  • அழைப்பில் மகிழும் - புதுச்சேரி இலக்கிய வட்டம்
  • தொடர்புக்கு: 9442029053

கருத்துகள் இல்லை: