நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 22 ஜூலை, 2010

கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா


கவிஞர் சிற்பி


கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் 08.08.2010 ஞாயிறு காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

பி.கே.கிருட்டினராச் வாணவராயர் அவர்கள் தலைமை தாங்கி விருது வழங்கிக் கவிஞர்களைப் பாராட்டுகின்றார்.

அருட்செல்வர் நா.மகாலிங்கம்,பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்,பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

இயகோகா சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் இலக்கிய விருது பெறுவோர் கவிஞர்கள் கலாப்பிரியா, இளம்பிறை ஆவர். இலக்கியப்பரிசில் பெறுவோர் கவிஞர்கள் அழகியபெரியவன், மரபின் மைந்தன்,தங்கம்மூர்த்தி,சக்திசோதி ஆவர்.சொற்கலை விருது பெறுபவர் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் அவர்கள் ஆவார்.கவிஞர் சிற்பி அறக்கட்டளையினர் அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை: