நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 நவம்பர், 2007

புதுச்சேரியில் 11 ஆவது தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கம் நடத்திவருகிறது.அந்த அந்த ஆண்டு வெளிவரும் நூல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் நேரடியாகப் பார்த்து வாங்க நல்ல வாய்ப்பாக இது அமையும்.இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி வேல்.சொக்கநாதன் திருமணமண்டபத்தில் திசம்பர் 17முதல் 26 வரை நடைபெற உள்ளது.அலுவலக நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரையும் கண்காட்சி நடைபெறும்.கண்காட்சியில் வாங்கும் நூல்களுக்கு 10% கழிவு வழங்கப்படும்.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ எண்பதிற்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் நூல்கள் பார்வைக்குக் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு,இந்தி முதலான மொழிகளில் அமைந்த நூல்கள் கிடைக்கும்.கல்வி நிறுவனங்களுக்குச் சிறப்புக்கழிவு உண்டு.நாள்தோறும் இன்னிசை.வினாடி-வினா போட்டிகள் நடைபெறும். 200 உரூவாவிற்குமேல் நூல்கள் வாங்குவோர்க்கு ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.அனுமதி இலவசம்.

கருத்துகள் இல்லை: