
சிங்கப்பூரில் பலவாண்டுகளாகத் தங்கித் தமிழ்ப்பணியும் கல்விப்பணியும் புரிந்துவரும் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஐயா அவர்களுக்குச் சிங்கப்பூரில் நடைபெறும் பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.
சிங்கப்பூரில் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெறும் விழாவில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் சோம. இளங்கோவன், மா.அன்பழகன், வீ.கலைச்செல்வன்,க.பூபாலன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சிறப்பு விருந்தினராகத் திரு. விக்ரம் நாயர் அவர்கள் கலந்துகொள்கின்றார்.இந்த விழாவில் பெரியார் விருது பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு வழங்கப்படுகின்றது.