நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 செப்டம்பர், 2012

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்




சென்னை, அடையாறில் அமைந்துள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 28.09.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

தொடக்க விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல், முனைவர் க.திருவாசகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிலரங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

குமாரராணி மீனா முத்தையா கல்லூரியின் தாளாளர் முனைவர் மீனா முத்தையா அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க உள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும், கல்லூரி முதல்வர் முனைவர் பி.டி.விஜய்ஸ்ரீ அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.

பயிலரங்க நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்ற உள்ளார்.

பயிலரங்கம் குறித்த ஆய்வறிக்கையைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சீ.சாந்தா அவர்கள் வழங்குவார்.

முனைவர் மு.இளங்கோவன்( பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி, புதுச்சேரி), முனைவர் ஆர்.கிருட்டிணமூர்த்தி (கணினிப்பொறியியல் பேராசிரியர் (பணிநிறைவு), அண்ணா பல்கலைக்கழகம்)

ஆகியோர் தமிழ் இணையம் பற்றியும் தமிழ் மென்பொருள்கள் பற்றியும் உரை நிகழ்த்துவர்.

தொடர்புக்கு :
 முனைவர் சீ.சாந்தா,
தமிழ்ப்பேராசிரியர்,
குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி, 
4, கிரசென்ட் அவென்யூ சாலை, அடையாறு, சென்னை- 600 020
 9962426445

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்





சென்னை, அடையாற்றில் குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியாகிய டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியால் 1996 இல் இக்கல்லூரி சென்னையின் முதன்மைப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் மரபு வழிப் பண்பாட்டினைக் கல்வியுடன் சேர்த்துக் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு இகல்லூரி செயல்பட்டு வருகின்றது.

இக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 2012 செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.

பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியின் வரலாற்றையும், தமிழ்த் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பதிவுகள், மின்னிதழ்கள், மின்னூல்கள், தமிழ்க்கல்வி, தமிழ் ஆராய்ச்சிக்கு உதவும் தமிழ் இணையதளங்கள் குறித்துத் தமிழ்வழியில் வழங்கப்படும் விளக்கங்களை அறியலாம். துறைசார் வல்லுநர் பயிற்சியளிக்க உள்ளார்.

பதிவுக்கட்டணம்:

பேராசிரியர்கள் உருவா 200-00

ஆராய்ச்சி மாணவர்கள் உருவா 100-00

பதிவுக்கட்டணம் வரைவோலையாக

PRINCIPAL,
KUMARARANI MEENA MUTHIAH COLLEGE OF ARTS& SCIENCE,
GANDHI NAGAR, ADYAR, CHENNAI- 600 020

என்ற முகவரிக்குப் பதிவுப்படிவத்துடன் அனுப்பப்பெற வேண்டும்.

தொடர்புக்கு :

முனைவர் சீ.சாந்தா, சென்னை
9962426445