நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பாவாணர் பிறந்தநாள் விழா!

 


இடம்: பாவாணர் பாசறை, முரம்புமவுண்டு சீயோன் (பேருந்து நிறுத்தத்தின் தென்புறம்), தெற்குச் சோழபுரம், இராசபாளையம் வட்டம், விருதுநகர் மாவட்டம். 

நாள்: 09.02.2023, வியாழக்கிழமை, நேரம்: காலை: 9.30 மணிக்கு மேல் 

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் பிறந்த நாள் விழாவினைப் பாவாணர் கோட்டத்தினர்  09. 02. 2023, காலை 9.30 மணிக்கு நடத்த உள்ளனர். இந்த நாளில் பேரணி, கொடியேற்றம், இசையரங்கம், நூல் வெளியீடு, பாவாணர் பிறந்தநாள் பேருரை, பாவாணர் கொள்கை பரப்புநர் விருதளிப்பு, நூலரங்கம், பட்டிமன்றம் எனப் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம். 

தொடர்புக்கு: ஆ. நெடுஞ்சேரலாதன், பேசி: 94432 84903





கருத்துகள் இல்லை: