நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 மார்ச், 2018

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொல்காப்பியக் கல்வியின் நிலை!



    1885 இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்தபொழுது பதிப்புரையில் சி.வை. தாமோதரம் பிள்ளை இவ்வாறு எழுதுகிறார்:

  "சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத்தின் (1825-இல்) முன்னிருந்த வரதப்ப முதலியாரின்பின் எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுதாரணங்களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை என்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பது அவர் தந்தையார் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையரான போது பிறையூரிற் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதனானும், அது காரணமாக அவருக்குத் தொல்காப்பிய வரதப்ப முதலியாரென்று பெயர் வந்தமையானும் பின்பு அவர் காலத்திலிருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுசயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையானும் நிச்சயிக்கலாம்". சுமார் கி.பி. 1825 இல் தொல்காப்பியக் கல்வியின் நிலை இது.

நன்றி: 
ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. 28.04.1992, பக்கம் 9,10 (மேற்கோள்)

கருத்துகள் இல்லை: