நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுக விழா




 பேராசிரியர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள் மொழிபெயர்த்த அப்பாவின் துப்பாக்கிப் புதினமும், எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் மொழிபெயர்த்த குற்றவிசாரணை புதினமும்  இன்று (28.02.2014) வெள்ளி மாலை  ஆறு மணிக்குப் புதுச்சேரி வணிக அவையில்அறிமுகம் செய்து, மதிப்பீடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் க. பஞ்சாங்கம், பா. செயப்பிரகாசம், கவிஞர் சுகுமாரன், காலச்சுவடு கண்ணன், நெய்தல் கிருஷ்ணன், சீனு. தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள இரண்டு நூல்களையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா