நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 மே, 2011

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைப் பொழிவு

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுச்சேரித் தனித்தமிழ்க்கழகம் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளது. ஆண்டுதோறும் பாவாணர் நினைவைப்போற்றும் அறக்கட்டளைப் பொழிவைத் தனித்தமிழ் அறிஞர்களைக் கொண்டு நிகழ்த்துவது அறக்கட்டளையின் நோக்கமாகும்.

இன்று(01.05.2011) காலை பத்தரை மணியளவில் புதுச்சேரித் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைப் பொழிவு தொடங்கியது. முனைவர் த. பரசுராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். திரு. பெ. தமிழ்நாவன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

விழுப்புரம் அறிஞர் அ.தெ.தமிழநம்பி அவர்கள் பாவாணரின் மடல்கள் என்ற தலைப்பில் அரியதோர் உரை நிகழ்த்தினார். கழக இலக்கியச்செம்மல் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தொகுத்த பாவாணர் மடல்கள் இரண்டு தொகுகளில் இடம்பெற்ற பாவாணர் மடல்களின் அடிப்படையில் சிறப்புரையாளர் பொழிவை அமைத்தார். பாவாணரின் கொள்கை,மொழிப்பற்று, வறுமை வாழ்வு, நூல் கற்ற நிலை ,கழக ஆட்சியர் வ.சுப்பையா அவர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் யாவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டன.

முனைவர் க.இரவிசங்கர் நன்றியுரையாற்றினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழார்வலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாவாணர் நினைவை மாந்தி வந்தேன்.

கருத்துகள் இல்லை: