நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 8 ஜனவரி, 2011

சென்னையில் பொங்கல் திருவிழா!



தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாம் பொங்கல் திருவிழா இன்னும் ஒரு கிழமையில் வர உள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் இல்லத்தில் பொங்கலிட்டு மகிழ்வர். இந்த நல்ல நாளை நகரத்தில் இருப்பவர்கள் தாங்கள் வாழ்ந்த சிற்றூர்ப்புற நினைவுகளை மறவாமால்
கொண்டாட விரும்புவது உண்டு. நகரத்தில் வாழும் பலர் சிற்றூருக்கு வந்து பொங்கலைக் கொண்டாடித் திரும்புவதும் உண்டு. சென்னை போன்ற பெரு நகரங்களில்
இருக்கும் தமிழன்பர்கள் முன்கூட்டியே பொங்கல் திருவிழாவை முன்னிட்டுச் சிற்றூர்போன்று குறிப்பிட்ட நகரப்பகுதியில் ஒன்றுகூடிப் பொங்கலிட்டு மகிழும் விழாவைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதை அறிவேன்.

இந்த ஆண்டும் அத்தகுப் பெரு விழா சென்னையில் நடைபெறுவதாகவும் வந்து கலந்துகொள்ளும்படியும் நண்பர்கள் வேண்டினர். அவ்வகையில் நாளை(09.01.2011) ஞாயிறு காலை சென்னையில் முகப்பேர் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான பொங்கல் பற்றியும், தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும் சிறப்புரை நிகழ்த்த உள்ளேன். தமிழ் ஆர்வலர்களும், பண்பாட்டுக் காவலர்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியூட்டலாம்.மகிழலாம்.

1 கருத்து:

கல்விக்கோயில் சொன்னது…

வாழ்த்துக்கள்! தங்கள் பணி சிறக்கட்டும் அய்யா.