நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 17 டிசம்பர், 2008

புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரிப் புத்தகக் கூட்டுறவுச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசியப் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரியில் நடத்துகிறது.இந்த ஆண்டு பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள் சற்றொப்ப அறுபதாயிரம் தலைப்புகளில் அமைந்த புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர்.

இதில் தமிழ், ஆங்கிலம்,பிரஞ்சு,இந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் அடங்கும்.கல்வி நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட அளவில் கழிவு உண்டு.

நுழைவு இலவசம்.

இடம் : வேல்.சொக்கநாதன் திருமண மண்டபம்,புதுச்சேரி.
நாள் : 19-12-2008 முதல் 28-12-2008 வரை

ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் உண்டு.

தொடர்புக்கு :
9444776733
9842330358

கருத்துகள் இல்லை: