நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 28 பிப்ரவரி, 2008

கணினியும் இணையப் பயன்பாடும் ஒருநாள் கருத்தரங்கு

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர்கல்லூரியும், சென்னைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் இணைந்து 28.02.2008 காலை 10.30 மணியளவில் கணினியும் இணையப்பயன்பாடும் என்னும் பொருளில் ஒருநாள் பயிலரங்கை மாணவிகள் பயன்பெறும் வண்ணம் நடத்தின.

பயிலரங்கிற்கு வந்திருந்தவர்களைத் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் இராமேசுவரி அவர்கள் வரவேற்றார். தமிழ் இணையப்பல்கலைக்கழக இயக்குநர் திரு.ப.அர.நக்கீரன், பேராசிரியர் சுதந்திரமுத்து, திரு.சானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளை விவரித்தனர். மாணவர்களுக்குக் காட்சி விளக்கமும் தரப்பெற்றன.

பிற்பகல் நடைபெற்ற அமர்வில் முனைவர் மு.இளங்கோவன், திருவாட்டி.மிக்சிமோள் திரு.கண்ணதாசன், திரு.சாகுல் அமீது ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், பிற துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: