நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சென்னை பாரதியார் இல்லத்தில் முப்பெரும் விழா




சென்னை, பாரதியார் சங்கம் 2012 செப்டம்பர் 10,11 ஆகிய நாட்களில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தில் முப்பெரும் விழாவை நடத்துகின்றது. பாரதி அன்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம்.

நிகழ்ச்சியில் முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி, உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, நீதியரசர் கே.என்.பாஷா, நீதியரசர் எஸ்.தமிழ்வாணன், தமிழறிஞர் கு.ஆளுடைய பிள்ளை, முனைவர் க.ப.அறவாணன், முனைவர் மறைமலை இலக்குவனார், வெ.முரளி (பட்டயக் கணக்கர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சனி, 8 செப்டம்பர், 2012

தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு, சென்னை


பார்வையாளர்கள்

தமிழ் இணைய ஆர்வலர்களின் சந்திப்பு சென்னையில் 08.09.2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தொழில் நுட்ப ஆர்வலர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.


தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு- படம்