நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 3 மார்ச், 2009

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையப்பயிலரங்கு

தமிழ் இணையப்பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும். தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும். அவ்வகையில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத் திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது. பல நூறு மாணவர்கள் பயன்பெற உள்ளனர். பயிலரங்கு சிறப்புற அமைய அனைவரும் ஒத்துழைக்கலாம்.

இது போன்ற பயிலரங்குகளை வாய்ப்பிருப்போர் கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்) வழியாக நடத்தித் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கலாம்.

திருச்செங்கோடு பயிலரங்கு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.


இடம்: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு, தமிழ்நாடு

நாள்: 14.03.2009,சனிக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை திரு.மா.கார்த்திகேயன்
தலைமையுரை: முனைவர் நா.கண்ணன்
அறிமுகவுரை : முனைவர் இரா.சந்திரசேகரன்

சிறப்புரை
புலவர் செ.இராசு,ஈரோடு

அமர்வு 1 :
தமிழும் இணையமும்

அமர்வு 2:
முனைவர் இரா.குணசீலன்
வலைப்பூக்கள் உருவாக்கமும் பயன்பாடுகளும்

உணவு இடைவேளை (1.00-2.00)

அமர்வு 3:
முனைவர் மு.இளங்கோவன்
இணைய இதழ்கள்

அமர்வு 4
திரு.சரவணன்
இணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு

அமர்வு 5
முனைவர் த.கண்ணன்
தமிழ் வலைப்பதிவுகள்

முன்பதிவு செய்து கலந்துகொள்ள வேண்டும்.

தொடர்புக்கு:

பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள்
தமிழ்ப்பேராசிரியர்,
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு- 637 215
தமிழ்நாடு

செல்பேசி + 94435 51701
மின்னஞ்சல் tamilchandru@yahoo.com


அழைப்பிதழ்


அழைப்பிதழ்

குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம்-படங்கள்

குடந்தைக் கதிர். தமிழ்வாணனின் பாவாணர் இல்லம்

 குடந்தைப் பேருந்து நிலையத்தின் கீழ்ப்புறம் அமைந்துள்ள சான் செல்வராசு நகரில் கதிர். தமிழ்வாணன் அவர்கள் பாவாணர் இல்லம் என்ற பெயரில் ஓர் இல்லம் எழுப்பி வாழ்ந்துவந்தார்கள். தமிழ் உணர்வாளர்கள் சந்திக்கும் இடமாகவும், குடந்தைப் பகுதியில் தமிழ்வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் நாற்றங்காலாகவும் அந்த இல்லம் விளங்கியது.

 பல்லாயிரம் தமிழ் உணர்வாளர்கள் வந்து உரையாடிய பெருமைக்கு உரியது. தம் கொள்கை ஆசான் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பெயர் தாங்கிய அந்த இலத்தில் திரும்பும் திசையெல்லாம் தமிழ்மணக்கும்.அழகிய குறட்பாக்கள், சங்க இலக்கிய வரிகள் கண்ணில் தென்படும். காண்போர் நின்று சிறிது நேரம் படித்துச்செல்லும்படி அந்த இல்லத்தின் சுவர்களை ஐயா அமைத்திருந்தார்கள். சன்னல் என்பது போர்ச்சுகீசிய சொல் எனவும் காலதர் என அதற்கு நேரிய தமிழ்ச்சொல் நம் சிலம்பில் உள்ளது எனவும் விளக்க, இரும்பில் படத்துடன் கூடிய அழகிய காலதரைப் பெரும் பொருட்செலவில் ஐயா செய்துவைத்திருந்தார்.

 கிழமைதோறும் தமிழ் வகுப்புகள், உரையாடல்கள் நடந்தன. திருக்குறள் ஓலிபரப்புகள் நாளும் தொடர்ந்தன. கணவனை இழந்த காரிகை போலும் அந்த இல்லம் ஐயாவின் குரல்ஒலி இன்றி இன்று வெறுமையாகக் காட்சி தருகிறது.


கண்டார் மகிழ்செய்யும் சுவர் அறிவிப்புகள்

அஞ்சல் உள்ளிடும் அஞ்சல் புழை

கணியம் குறித்த அறிவிப்பும்,"மான்கண் காலதர்"விளக்கும் இரும்பு காலதரும்(சன்னல்)

நாளும் திருக்குறள் பரப்பும் கரும்பலகை

"பாவாணர் இல்லம்" என்ற பெயரில் அமைந்த கதிர்.தமிழ்வாணன் இல்லம்

தமிழ் அறிஞர்களின் படங்கள் தாங்கிய முகப்பு (ஒரு படத்தில் கதிர். ஐயா அமர்ந்திருக்க, யான் அருகில் வெள்ளிக்கோப்பை, தங்கப்பதக்கத்துடன்)

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் படம்